இந்தப் பரிகாரத்தை மட்டும் பைரவருக்கு செய்து வந்தால் போதும். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைகளிலிருந்து உடனே விடுபட முடியும்.

kadan
- Advertisement -

ஒருவரின் வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் பெரும்பான்மையோருக்கு அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே எட்டாக்கனியாக தான் இருக்கிறது. அதிலும் ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட்டி கடனை திருப்பி கேட்பார்கள் என்று மனது எப்பொழுதும் கவலையுடனும், படபடப்புடனுமே இருக்கும். இவ்வாறான கடன் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bayam-fear

எவரும் மகிழ்ச்சியாக விருப்பத்துடன் கடன் வாங்குவதில்லை. ஆனால் சில நேரங்களில் தாங்கள் சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறான கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட நமது வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதுமானதாகும். அந்தப் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகுதான் அவ்வாறான அற்புதப் பொருள்.

- Advertisement -

மிளகிற்கு மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆன்மிக ரீதியாக எதிர்மறை ஆற்றலை அழித்து, நேர்மறை ஆற்றலை தன்னிடம் ஈர்ப்பதில் மிளகிற்கு பெரும் பங்கு இருக்கிறது.

Milagu benefits in Tamil

ஒரு கைப்பிடி மிளகுடன் சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து அதனை நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட்டால் போதும். எப்பொழுதும் உங்கள் வீட்டில் பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

கடன் தீர பைரவருக்கு மிளகு பரிகாரம்:
27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

white

அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும் பொழுது உங்கள் மனதில் எவரிடம் நீங்கள் கடன் வாங்கி உள்ளீர்களோ அவரின் பெயரை உச்சரித்து, இவரிடம் நான் வாங்கிய கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

uppu

அதேபோல் வாரம் ஒரு முறையாவது மிளகுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து உங்களையும், உங்கள் வீட்டையும் சுற்றி விட்டு அதனை எரியும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பில் எப்படி மிளகு பொரிகிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் அனைத்து கண் திருஷ்டிகளும் பொரிந்து விடும். பிறகு உங்கள் வீட்டில் பணத்திற்கான வரவு நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உங்களை வந்தடையும்.

- Advertisement -