கடன் அடைய பைரவருக்கு தீபம்

kadan theera
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாமல் வாழக்கூடிய மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு கடன் மனிதர்களை பாடாயப்படுத்துகிறது என்றே சொல்லலாம். எதற்கு கடன் வாங்க வேண்டும் எதற்கு இப்படி வருந்த வேண்டும் என்ற இன்னொரு கேள்வி கேட்கலாம். நம்முடைய தேவைக்குபணம் போகுதா குறை வரும் போது வேறு வழியில்லாமல் வாங்க வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று பலரும் இருக்கிறோம்.

அப்படி வாங்கிய கடனை அடைக்கவே வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறோம். கடன் வாங்கி அதில் இப்படி நாம் துன்பப்பட வேண்டும் என்பதும் நம்முடைய ஊழ்வினை என்று சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும் கடன் என்னும் அரக்கன் உள்ளே நுழைந்து விட்டால் நிம்மதி என்பது பறிபோய் விடும் என்பது மட்டும் உண்மை.

- Advertisement -

இந்த கடன் தொல்லை நீக்கி நம்மை நிம்மதியாக வாழ வைக்கக் கூடிய தெய்வங்களில் பைரவரும் ஒருவர். இந்த பைரவரை எப்படி வழிபட்டால் நம்முடைய கடன் தீர்ந்து நிம்மதியாக வாழ முடியும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர தீபம்

சிவபெருமானின் மறு உருவமாகவே இந்த பைரவரை நாம் பாவித்து வணங்கி வருகிறோம். அப்படியான பைரவர் நம்முடைய கடன் தொல்லை மட்டும் இன்றி ஊழ்வினைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி வாய்ந்தவர். ஆகையால் தான் கடன் பிரச்சனை இருந்து வெளிவரும் பெரும்பாலானோர் வைரவர் வழிபாடு செய்கிறார்கள்.

- Advertisement -

பைரவர் வழிபாடு செய்ய அஷ்டமி மிகவும் உகந்தது அதிலும் நம்முடைய துன்பம் கடன் போன்றவை தீர்த்த தேய்பிறை அஷ்டமி மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அத்தகைய தேய்பிறை அஷ்டமியான இன்று மாலை பைரவருக்கு இந்த தீபத்தை போடுவதன் மூலம் நம்முடைய கடன் தொல்லை முற்றிலுமாக நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பைரவ வழிபாட்டை ஆலயத்தில் செய்வது தான் சிறந்தது. அதே போல் பைரவ வழிபாட்டிற்கு மாலை நேரம் தான் உகந்தது. ஆகையால் இன்று மாலை பைரவர் கோவிலுக்கு சென்று இந்த மூன்று தீபத்தில் ஏதேனும் ஒரு தீபத்தை போட்டு வணங்கி வந்தால் கூட போதும் உங்களது கடன் தொல்லை நிச்சயமாக தீர்ந்துவிடும்.

- Advertisement -

தீப வழிபாட்டிற்கு ஒரு அகல் விளக்கு தேவை. இந்த அகல் விளக்கு கருப்பு நிற மண்ணால் செய்த விளக்காக இருக்க வேண்டும். அதில் ஏற்றும் போது தான் பலன் அதிகம். அத்துடன் 35 மிளகாய் அல்லது எட்டு மிளகு இரண்டு ஏதாவது ஒரு எண்ணிக்கையில் எடுக்க வேண்டும். இந்த மிளகை ஒரு சிகப்பு நிற காட்டன் துணியில் வைத்து சிகப்பு நிற நூலால் கட்ட வேண்டும்.

அதே போல் தீபத்தை ஏற்ற வேப்ப எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் பைரவர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு முன்பாக இந்த அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு எண்ணெய் ஊற்றி மிளகு மூட்டை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் போது உங்களுடைய கடன் தொல்லை முற்றிலுமாக நீங்க மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதே தீபத்தை பூசணிக்காய் கொண்டும் ஏற்றலாம். இதற்கு வெள்ளை பூசணிக்காய் வாங்கி இரண்டு பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் விதை பகுதிகளை எல்லாம் எடுத்து விடுங்கள். பூசணிக்காய்க்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விட்டு மிளகு மூட்டை வைத்து எண்ணெய் ஊற்றி பைரவருக்கு தீபம் வேண்டும். பூசணிக்காய் தீபம் ஏற்ற முடியவில்லை எனில் இதை போல தேங்காய் தீபம் ஏற்றலாம்.

இவை அனைத்திலும் விட பாகற்காயில் ஏற்றப்படும் தீபம் சீக்கிரம் பலன் தரக்கூடியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு முழு பாகற்காய் எடுத்து அதன் நடுப்பகுதியில் வெட்டி எடுத்து விட்டு உள்ளிருக்கும் விதையும் எடுத்து இது போல மிளகு முட்டை வைத்து எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த வழிபாட்டை தொடங்குவது தேய்பிறை அஷ்டமியில் தொடங்குங்கள்.

இதையும் படிக்கலாமே: தை வெள்ளியில் மகாலட்சுமி தாயார் பூஜை

அதன் பிறகு எட்டு அஷ்டமிகள் தொடர்ந்து இந்த தீப வழிபாட்டை செய்து வரும் போது நிச்சயம் உங்கள் கடன் தொல்லை தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் பைரவரை வணங்கி இந்த தீப வழிபாட்டை செய்து கடன் பிரச்சனையிலிருந்து வெளி வந்து நிம்மதியாக வாழுங்கள்.

- Advertisement -