லட்சக்கணக்கில் கடன் இருந்தாலும் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த இரண்டு தீபத்தை ஏற்றுங்கள். கடன் எப்படி காணாமல் போனது என்று உங்களுக்கே தெரியாது.

mahalakshmi dheepam
- Advertisement -

இந்த உலகில் நிம்மதியான வாழ்க்கை வாழும் மனிதன் யார் என்றால் அவன் கடன் இல்லாமல் வாழும் மனிதன் தான் என்று யோசிக்காமல் சொல்லி விடலாம். அந்த அளவிற்கு கடன் இன்று இந்த உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கடனை சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த கடனை எளிமையாக குறைக்க ஒரு அற்புதமான தீப பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

vetrilai-deepam

எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பு நாம் பல முறை யோசிக்க வேண்டும் என்றால், இந்த கடனை வாங்கும் முன்பு மட்டும் நாம் ஓராயிரம் முறை யோசிக்க வேண்டும். கடன் என்னும் அரக்கன் நம் வாழ்க்கையில் ஒதுங்கி விட்டால் வாழ்க்கையை சின்னாபின்னம் ஆகிவிடும். ஆகையால் முடிந்த வரையில் இருப்பதைக் கொண்டு கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை வாழ பழகிக் கொள்வதே சிறந்தது. என்ன இருந்தாலும் சூழ்நிலை காரணமாக இந்த கடன் பிடியில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து வெளியேற இந்த தீப பரிகாரம் உதவி புரியும்

- Advertisement -

கடன் அடைய வெற்றிலை தீபம்
இந்த தீபம் ஏற்றுவதற்கு மூன்று வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையை நன்றாக இருக்க வேண்டும் அதில் சின்ன ஓட்டை கூட இல்லாமல் இருக்க வேண்டும். இப்போது இந்த மூன்று வெற்றிலையும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து அதன் மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இந்த தீப வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய கடன் விரைவில் அடைய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

maruthani ila dheepam

கடன் விரைவில் அடைய மருதாணி இலை தீபம்
அதே போல் இந்த மருதாணி இலை தீபத்தையும் ஏற்றலாம். அதற்கு ஒரு பித்தளை தட்டில் முழுவதுமாக மருதாணி இலையை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மேல் கொஞ்சம் சில்லறை காசுகளை போட்ட பிறகு சில்லறை காசுகளின் மீது இரண்டு அகல் விளக்கை வைத்து விடுங்கள். அதிலும் இதே போல் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரின் மனதார நினைத்து வணங்குங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு தீப வழிபாட்டு முறையில் எந்த தீப வழிபாட்டு முறையை செய்தாலும் கடன் அடைவதற்கான வாய்ப்பு வருவதோடு, பண வரவிற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பணம் கையில் புழங்க ஆரம்பித்தாலே கடன் ஆனது அடைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றும் போது உங்களுக்கு பணவரவிற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே:

இந்த தீப வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்து மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளாசியை பெற்று கடன் இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழும் பாக்கியத்தை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -