இந்த தெய்வத்தை வழிபட்டால் தீராத கடன் தீருமா? சொந்த வீடு கட்டும் யோகம் இவரை வழிபடுபவர்களுக்கு விரைவிலேயே கிடைக்குமாம் தெரியுமா?

durgai-murugan
- Advertisement -

தீராத கடன் தீருவதற்கு வழிபட வேண்டிய தெய்வம் என்ன? எல்லா பிரச்சனைகளுக்கும் எல்லா கடவுளரையும் வணங்குவது கிடையாது. அந்தந்த பிரச்சனைக்கு ஏற்ப நம்முடைய இந்து சமுதாயத்தில் நிறையவே கடவுளர்கள் உண்டு. இருப்பினும் நாம் இஷ்ட தெய்வத்தை மட்டுமே நம் பிரச்சனையை நோக்கி வேண்டுதலை வைக்கிறோம். இந்த வகையில் தீராத கடன் தீர எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்? சொந்த வீடு கட்டும் யோகம் இவரை வழிபடுபவர்களுக்கு உடனே கிடைக்குமாம்! அவர் யார்? என்பது போன்ற ஆன்மீக தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

காரிய வெற்றிக்கு விநாயகருக்கு 108 முறை தேங்காய் உடைத்து வழிபடுவதை பார்த்திருப்போம். அதுபோல ஒருவர் படிப்பில் நன்றாக வர வேண்டும், கலைகளில் சிறந்தவராக விளங்க வேண்டும் என்றால் சரஸ்வதி தேவியை வணங்கி வருகிறோம். இப்படி ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு விதமான கடவுளர்கள் உண்டு. அந்த வகையில் தீராத கடன் தீருவதற்கு பைரவரை வழிபடுவது உண்டு. அது போல துர்க்கை அம்மனையும் வழிபடலாம்.

- Advertisement -

துர்க்கையிடம் வைக்கும் பிரார்த்தனைகள் யாவும் உடனே பலிப்பதாக ஐதீகம் உண்டு. கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையை உடனே தீர்த்து வைக்கும் ஒரு சக்தி வாய்ந்த அம்மன் ஆகவும் துர்க்கை அம்மன் விளக்குகிறார். அவரை எப்படி வழிபட்டால் தீராத கடன்கள் தீரும்? என்பதை பார்ப்போம். முதலில் துர்க்கை அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். நிச்சயம் துர்க்கை அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

உக்கிர தெய்வங்களின் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறுவது உண்டு. ஆனால் துர்க்கை அம்மன் உக்கிர தெய்வம் என்பதை காட்டிலும், கேட்டதை கேட்டபடி கொடுக்கும் சக்தி வாய்ந்த அம்மனும் ஆவார் எனவே இவரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் மண் அகல் தீபம் ஒன்றை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் செவ்வரளி மலர்களால் துர்க்கை அம்மனை அலங்காரம் செய்ய வேண்டும். இதை செவ்வாய்க்கிழமைகளில் செய்வது மிகவும் சிறப்பு.

- Advertisement -

பின்னர் எழுமிச்சை பழம் ஒன்றை கருப்பு புள்ளிகள் இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நான்காக பகுதி வரை வெட்டி உள்ளே குங்குமத்தை நன்கு தடவ வேண்டும். பின்னர் இதை பூஜை அறையில் வைத்து மனதார பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை முடிந்ததும் உங்களுடைய வலது கையில் அந்த எலுமிச்சையை எடுத்து உங்களுடைய தலையை சுற்றி நீங்களே 27 முறை திருஷ்டி கழிக்க வேண்டும். இப்படி நீங்கள் உங்களை நீங்களே எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி கழிப்பதால், நீங்கள் நினைத்த பிரார்த்தனைகள், உங்களுடைய மனதில் இருக்கும் கோரிக்கைகள் யாவும் துர்க்கை அம்மன் உடனே ஏற்றுக் கொள்வார்.

பின்னர் இந்த பழத்தை நான்கு துண்டுகளாக உங்களுடைய கைகளால் பிரித்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு வெளியில் சென்று கொட்டி விட வேண்டும். இப்படி செய்தால் உங்களை பிடித்த தரித்திரங்கள், பீடை, துன்பங்கள், கஷ்டங்கள் யாவும் தீரும். மேலும் நீங்கள் பட்ட கடன்கள் முழுவதும் அடையும். சொந்த வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு செவ்வாய் பகவானையும், முருக கடவுளையும் வழிபட வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் இவ்விருவரையும் வணங்கி வருபவர்களுக்கு கண்டிப்பாக சொந்த வீடு கட்டும் யோகம் விரைவிலேயே கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே சொந்த வீடு கட்டும் ஆசை உள்ளவர்கள் இவ்விருவரையும் வழிபட மறக்காதீர்கள்.

- Advertisement -