கடன் தீர மார்கழியில் எழுத வேண்டிய வார்த்தை

mahalshmi6
- Advertisement -

சில பேர் கணக்கே இல்லாமல் கைநீட்டி கடன் வாங்கி வைத்திருப்பார்கள். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாது. அந்த அளவுக்கு ஊரை சுற்றி கடன் இருக்கும். உங்களுக்கு எப்படி. ஊரை சுற்றி கடன் இருக்கிறதா அல்லது ஓரிரு இடங்களில் மட்டுமே கடன்கள் இருக்கிறதா?

எதுவாக இருந்தாலும் சரி, இந்த மார்கழி மாத பிரம்ம முகூர்த்தத்தில் இந்த ஒரு வார்த்தையை எழுதுங்க. உங்களுடைய கடன் காணாமல் போய்விடும். கடன் காணாமல் போக எழுத வேண்டிய அந்த வார்த்தை என்ன. அதை எத்தனை முறை எழுத வேண்டும். ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

கடன் காணாமல் போக எழுத வேண்டிய வார்த்தை

மார்கழி முதல் தேதி முடிந்தது. இரண்டாம் நாள் தொடங்கி இருக்கிறது. இந்த பரிகாரத்தை மார்கழி மாதம் தொடர்ந்து 21 நாட்கள் செய்ய வேண்டும். இடையில் ஏதாவது தடை வந்தாலும் பரவாயில்லை. அல்லது மார்கழி மாதம் முழுவதும் இந்த வார்த்தையை நீங்கள் எழுதினாலும் எந்த பிரச்சனையும் கிடையாது.

அதிகாலை 4.00  மணிக்கு கண் விழிக்கவும். இதற்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. நீங்கள் சுத்த பத்தமாகத்தான் இருக்கிறீர்கள் எனும் பட்சத்தில், பல் தேய்த்து முகம் கழுவி விட்டு வீட்டில் ஒரு இடத்தில் அமர்ந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்று இரண்டு என்று எண்களை வரிசைப்படுத்தியே இந்த வார்த்தையை நீங்கள் எழுதலாம்.

- Advertisement -

சரியாக 21 முறை இந்த வார்த்தையை எழுத வேண்டும். ‘என்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்தது’ என்று 21 முறை எழுத வேண்டும். எழுதிவிட்டு இந்த நோட்டு புத்தகத்தை பூஜை அறையிலேயே வைத்துவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் குலதெய்வத்தையும் இந்த பிரபந்தத்தையும் நினைத்து நீங்கள் கைநீட்டி வாங்கிய கடனை எல்லாம் உங்கள் கையாலேயே திருப்பி கொடுப்பது போல, ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள்.

எல்லா கடனையும் கொடுத்து முடித்து விட்டோம். மீதம் நம் கையில் பணம் இருக்கிறது. இனி நாம் கடன் வாங்காமல் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தப் போகின்றோம் என்று, பாசிட்டிவாக நனையுங்கள். நடக்காத அந்த நல்ல விஷயம் நடந்து விட்டதாக இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நினைத்தால், நீங்கள் நினைத்த அந்த நல்ல விஷயம் சீக்கிரம் நடக்கும்.

- Advertisement -

புரிகிறதா? மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்த ஒரு நெகட்டிவ்வான விஷயத்தையும் மனதில் கொண்டு வரக்கூடாது. அச்சச்சோ கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுமோ? கடனை திருப்பித் தர நான் கஷ்டப்படுவேனோ? என்றெல்லாம் யோசிக்காதீங்க. பணம் வரும், கடனை திருப்பித் தருவேன், சந்தோஷமாக வாழுவேன் என்று நினையுங்கள். நீங்க நினைத்தது நிச்சயம் நடக்கும்.

இதையும் படிக்கலாமே: சனிபகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள்

ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் கூட பூஜை அறையை தொடாமல் ஒரு இடத்தில் தனியாக உட்கார்ந்து இதை எழுதலாம் தவறு கிடையாது. நல்ல வார்த்தையை சொல்லுங்க, நல்லதே நினைங்க, நிச்சயம் நீங்கள் நினைத்த நல்லது நடக்கும். மேல் சொன்ன விஷயத்தை இந்த மார்கழி மாதத்தில் முயற்சி செய்து பாருங்கள். அடுத்த மார்கழியில் நீங்கள் கடனாளியாக இருக்கவே மாட்டீங்க என்ற என்னத்தை மனதில் ஆழ பதிவு செய்து, இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -