கடன் அடைய கிராம்பு பரிகாரம்

sevvai cash kirambhu
- Advertisement -

இன்று வாழ்க்கையில் பெரும்பான்மையான துன்பத்திற்கு காரணம் இந்த கடனாகத் தான் இருக்கும். கடன் என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே வாழ்க்கை நல்ல முறையில் சீரும் சிறப்புமாக இருக்கும். இந்த கடன் பிரச்சனையானது நம் வீட்டுக்குள் வந்து விட்டால் போதும் வீட்டுக்குள் இருக்கும் நிம்மதி சந்தோஷம் அனைத்தும் வெளியேறி விடும்.

அப்படியான இந்த கடன் தீர வேண்டும் என்றால் நமக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும். வருமானம் அதிகரித்து வாங்கிய கடனை முழுவதுமாக அடைத்து நிம்மதியாக வாழ பல தாந்திரீக பரிகாரங்கள் உள்ளது. அதில் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு மாதத்தில் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் செவ்வாய்க்கிழமையானது அங்கார காரனுக்கு உரியது. அங்கார காரகன் என்பவர் செவ்வாய் பகவான் இவருக்கு கிரக பகவான், ருண பகவான் என்று இரண்டு நாமங்கள் உண்டு.

ஆகையால் நிலம் வீடு தொடர்பான பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு நம் மேற் கொள்கிறோம். ருணம் என்றால் கடன், கடன் தீருவதற்கான வழிபாடு செவ்வாய்க்கிழமையில் செய்வதற்கான காரணம் இது தான். இவருக்கு அதிபதியான தெய்வம் முருகப்பெருமான் அவருக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமை. ஆகையால் தான் இந்த நாளில் இந்த பரிகாரத்தை நாம் செய்கிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணிக்குள் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் செய்யலாம். ஆனால் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் செய்யும் போது அதிக பலனைத் தரும். இந்த ஹோரை நேரம் மாத காலண்டரில் இருக்கும் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு அகல் விளக்கு, அரை ஸ்பூன் நெய், ஒரு கட்டி கற்பூரம் மூன்று உடையாத நல்ல நிலையில் உள்ள கிராம்பு இவை மட்டும் தான் தேவை. அதே போல் இந்த பரிகாரம் செய்யும் நேரம் வரை அசைவம் சாப்பிடக் கூடாது. அதே போல் குளித்து விட்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் ஒரு சிறிய தட்டை வைத்து விடுங்கள். அதன் மேல் அகல் வைத்து அகலில் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது நெய்யில் கிராம்பையும் கற்பூரத்தையும் போட்டு கொளுத்தி விடுங்கள். இந்த நெருப்பு எரியும் போது அதை பார்த்துக் கொண்டே உங்களுடைய முழு கடனும் அடைய வேண்டும். அதற்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த கற்பூரம் முழுவதுமாக எரிந்த பிறகு அகலில் மீதி இருக்கும். கிராம்பு, நெய் முழுவதையும் கால்படாத இடத்தில் ஊற்றி விடுங்கள் அல்லது சிங்களூற்றி கழுவி விளக்கை எடுத்து வைத்து விடுங்கள். இதே விளக்கை அடுத்த மாதம் செவ்வாய்க்கிழமை இந்த தீபம் ஏற்றும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனை முழுவதுமாக அடைந்து விடும். அதற்கான பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -