7 அமாவாசைக்கு குலதெய்வத்திற்கு இதை செய்தால் எத்தகைய தீராத கடனும் எளிதில் தீரும் தெரியுமா?

kuladheivam-cash
- Advertisement -

எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அதனை நாம் குலதெய்வத்தின் அருளுடன் செய்வது மிகவும் நல்லது. நம் உயிரைப் பறிக்க வரும் எமன் கூட குலதெய்வ அனுமதி இன்றி பறிப்பதில்லை என்கிறது சில புராணங்கள். நம் குலத்தை காக்கும் குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம்? என்பது இதன் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வகையில் தீராத கடன் தொல்லை தீர்வதற்கு குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய இந்த எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

kula-dheivam

ஒருவருடைய வம்சம் தழைக்க அவர்களுடைய குலதெய்வ ஆசீர்வாதம் கண்டிப்பாக அவர்களுக்கு தேவை. அமாவாசையில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வது போல, குலதெய்வத்தை வேண்டி வணங்கினால், வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது நியதி. அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய சந்திர தினங்களில் இப்பிரபஞ்சத்தில் அதிக சக்தி நிலவும் என்பது உண்மை.

- Advertisement -

அத்தகைய நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது. குலத்தைக் காக்கும் குல தெய்வத்திற்கு 7 அமாவாசைகள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் கழுத்தை நெரிக்கும் தீராத கடன் பிரச்சனை கூட காணாமல் போகும் என்பது நம்பிக்கை. ஒரு சிறிய அளவிலான மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளையாக இருக்கும் சுத்தமான துணியை நன்கு மஞ்சள் கலந்த நீரில் தோய்த்து உலர வைத்து பின்னர் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

epsam-salt

அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது ஒரு குண்டு மஞ்சளை வையுங்கள். இந்த பரிகாரத்திற்கு குண்டு மஞ்சள் தான் வைக்க வேண்டும். வேறு மஞ்சளை பயன்படுத்தக் கூடாது. பின்னர் அதனை மஞ்சள் நூல் அல்லது அதே துணியை நூலாக கிழித்து கட்டிக் கொள்ள வேண்டும். மூன்று முடிச்சுகளைப் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் இந்த முடிப்பை உங்கள் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

வெறும் தரையில் வைக்கக் கூடாது அதற்கு கீழே ஏதாவது ஒரு தட்டு வைத்து அதன் மீது வையுங்கள். தினசரி அதற்கு ஊதுபத்தி காண்பித்து வந்தால் போதும், வேறு எதையும் பெரிதாக நாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஊதுபத்தி காண்பிக்கும் பொழுது உங்கள் குலதெய்வ மந்திரம் தெரிந்தால் அதனை மூன்று முறை உச்சரித்துக் கொண்டே காண்பியுங்கள். ஒவ்வொரு அமாவாசையிலும் இதனை நீங்கள் புதிதாக தான் செய்ய வேண்டும். மறுமுறை நீங்கள் செய்யும் பொழுது ஏற்கனவே நீங்கள் செய்த இந்த முடிப்பை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும் அல்லது கால் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும்.

manjal-mudichu

மீண்டும் அதே துணியை எடுத்து பயன்படுத்தக் கூடாது, எனவே துணி முதல் எல்லா பொருட்களையும் நீங்கள் மாற்றிக் கொள்வது நல்லது. இப்படி ஏழு அமாவாசைகள் வரை தொடர்ந்து நீங்கள் உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து செய்து வந்தால் போதும் எத்தகைய தீராத கடனும் தீர்ந்துவிடும். குலதெய்வ அருள் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் நமக்கு எளிதாக நடப்பது இல்லை. குலதெய்வ அருள் இருந்தால் எத்தகைய பெரிய பிரச்சனையும் மிக எளிதாக தீர்ந்து விடும் எனவே இந்த பரிகாரத்தை செய்து உங்கள் கடன் பிரச்சினையை சுலபமாக தீர்த்துக் கொள்ளலாமே.

- Advertisement -