ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம் என்றெல்லாம் இவையெல்லாம் தேவை என்று ஒரு காலத்தில் சொல்லி வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் வாழும் மனிதனே நிம்மதியாக வாழும் மனிதன். அந்த அளவிற்கு கடன் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. கடன் ஒன்றும் தானாக வருவதில்லை தான் நாம் வாங்கிய பணம் தான் கடனாக நம்மை துரத்துகிறது ஆனால் அதற்கும் சூழ்நிலை தானே காரணம்.
இப்படி கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் அனைவரும் சொகுசாக வாழ நினைத்து வாங்குவது கிடையாது. ஏதோ சூழ்நிலை காரணமாக வாங்கி பின் அதை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவாரகள். இப்படி திணறுபவர்கள் கால பைரவரை நினைத்து இந்த ஒரு பொருளை வைத்து வணங்கினால் தீர்க்கவே முடியாத கடன் கூட தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் எப்படி வணங்க வேண்டும் என்பதெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சிவனின் ருத்ர அவதாரமாக கருதப்படுபவர் தான் இந்த கால பைரவர். கால பைரவரிடம் எந்த ஒரு குறைக்காக முறையிட்டாலும் அதற்கு கை மேல் பலன் கொடுக்கக் கூடிய கடவுளாக விளங்குகிறார். பொதுவாக பைரவ வழிபாடுகள் அனைத்தும் தேய்பிறை அஷ்டமியில் தான் செய்வோம். அஷ்டமி ஆனது இவருக்கு பரிகாரம் செய்ய உகந்த நாள்.
தேய்பிறையில் நாம் பரிகாரம் செய்வதே நம் துயர் நீங்க தான். தேய்பிறையில் செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் துன்பங்களை தேய்ந்து கொண்டு செல்லும் என்று சொல்வார்கள். ஆனால் கடன் தீர்க்கச் செய்ய வேண்டிய இந்த பரிகாரத்தை தேய்பிறை அஷ்டமி வரை காத்திருந்து செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் நினைத்த மாத்திரத்திலே பைரவரை சரணடைந்து இந்த ஒரு பரிகாரத்தை செய்து விடலாம்.
கடன் அடைய பரிகாரம்:
இந்த பரிகாரத்தை செய்வதற்கு கால பைரவர் மூல தெய்வம் ஆக இருக்கும் ஆலயத்தில் செய்தால் மிகவும் சிறப்பு. இந்த ஆலயம் அருகில் இல்லாதவர்கள் மட்டும் சிவாலயங்களில் இருக்கும் கால பைரவருக்கு செய்யலாம். இந்த வழிபாடு செய்ய 6 அகல் விளக்கை கொண்டு பைரவர் முன்பு நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு கைப்பிடி நிறைய முந்திரி பருப்பை கால பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கி உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று மனதார அவரை வேண்டிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு கால பைரவரை ஆறு முறை சுற்றி வர வேண்டும். சுற்றும் பொழுதும் கூட உங்களுடைய கடன் பிரச்சனை தீர்வு வேண்டும் என்ற வேண்டுதலை மனதார வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பைரவருக்கு வைத்த அந்த முந்திரி பருப்பு ஆலயத்தில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக வழங்கி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: நாளை வாஸ்து நாள்! வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படுபவர்கள், சொந்த வீடு வாங்க நிலை வாசலில் இந்த 1 பொருளை மட்டும் வைத்தால் போதும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய கடன் சுமைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்களே உணர முடியும். அதற்கான வாய்ப்புகளையும் பணவரவையும் கால பைரவர் நிச்சயம் உருவாக்கித் தருவார். நீங்களும் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்கள் கடனை அடைத்து நிம்மதியாக வாழலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.