நாளை வாஸ்து நாள்! வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படுபவர்கள், சொந்த வீடு வாங்க நிலை வாசலில் இந்த 1 பொருளை மட்டும் வைத்தால் போதும்.

vasal
- Advertisement -

நாளை வாஸ்து நாள்(04-06-2023). மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய இந்த வாஸ்து நாளை நாம் சரியாக பயன்படுத்தினால், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். சொந்த வீடு வாங்குபவர்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வாடகை வீட்டில் தங்கி இருந்து கொண்டு, புதுசாக வாடகை வீடு மாற வேண்டும், ஆனால் வேறொரு நல்ல வாடகை வீடு கிடைக்கவில்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சொந்த வீடு கட்டியாச்சு, ஆனால் வீட்டில் வாஸ்து பிரச்சனை இருக்குது. ஒரே சண்டை சச்சரவாக இருக்குது. வீட்டில் நிம்மதி இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கடன் வாங்கி வீடு கட்டி இருப்போம். கடனை திருப்பித் தர முடியவில்லை. என்னதான் பிரச்சனை என்று தெரியாது. வீட்டில் பணக்கஷ்டம் இருக்கிறது என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வாங்க நாளைக்கு வாஸ்து நேரம் என்ன. அந்த நேரத்தில் பரிகாரத்தை எப்படி செய்வது என்று விரிவாக பதிவிற்குள் சென்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வாஸ்து நாள் வழிபாடு:
நாளைய தினம் காலை 10.00 மணியிலிருந்து 10.34 வரைக்கும் வாஸ்து நேரமாக சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் இந்த நேரத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வீட்டை எல்லாம் சுத்தம் செய்து விடுங்கள். இன்றே முடிந்தால் விநாயகருக்கு உகந்த, தோஷங்களை நீக்கக்கூடிய அருகம்புல் தேவையான அளவு வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள்.

நாளை சுத்தம் செய்த வீட்டில் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் விநாயகரை முதலில் மனதார நினைத்து விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். எடுத்து வைத்திருக்கும் அருகம்புல்லை மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். தொடுத்த இந்த மாலையை பூஜை அறையில் வைத்துவிட்டு, குலதெய்வத்தையும் சிவபெருமானையும் விநாயகரையும் மனதார நினைத்து இந்த மாலையை கொண்டு போய் நிலை வாசல் படியில் கட்டி விட வேண்டும்.

- Advertisement -

உங்களால் எவ்வளவு நீளத்திற்கு அந்த அருகம்புல் மாலையை உங்கள் கையால் தொடுக்க முடியுமோ தொடுக்கலாம். தவறு கிடையாது மாயிலை தோரணம் போல வீட்டு வாசலில் இதை மாட்டினால் கூட போதும். ஆனால் இந்த முழு பரிகாரத்தையும், வழிபாட்டையும் மாலை தொடுப்பதையும் நீங்கள் காலை 10.00 மணியிலிருந்து 10.30 குல் செய்து முடித்திருக்க வேண்டும்.

விநாயகரை நினைத்து நாளைக்கு இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து அருகம்புல் மாலையை நிலை வாசல் படியில் மாட்டி விட்டால் போதும். உங்களுடைய வீட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் சரி, அதை சரி செய்யக்கூடிய வேலையை அந்த விக்னங்களை தீர்க்கும் விநாயகர் பார்த்துக் கொள்வார்.

இதையும் படிக்கலாமே: பல வருடங்களாக பணிபுரிந்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் கோமதி சக்கரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் சம்பள உயர்வுடன் கூடிய உயர் பதவி கிடைக்கும்.

நிம்மதியை மட்டும் நிச்சயமாக உங்களுக்கு கொடுப்பார். இவ்வளவு அற்புதம் வாய்ந்த இந்த வாஸ்து நேரத்தில் இந்த சிறிய வழிபாட்டை, எளிமையான வழிபாட்டை செய்து அனைவரும் பலனடைய வேண்டும். என்பதற்காகத்தான் இந்த குறிப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்பை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -