கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்

sivan mysore dall
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரிடமும் நீங்கள் நிம்மதியாக இருக்க என்ன தேவை என்று கேட்டால் முதலில் அவர்கள் கூறுவது என்னுடைய கடன் முழுவதுமாக அடைய வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்று ஒவ்வொருவரும் பெரும் கடன் சுமையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கடனிலிருந்து நாம் வெளிவர மாட்டோமா? என்று ஒவ்வொரு நாளும் சிந்தித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

அப்படியான இந்த தீரா கடனிலிருந்து வெளி வந்து நிம்மதியாக வாழ பல பரிகாரங்களும், வழிபாடுகளும் இருந்தாலும் இந்த ஒரு எளிய பரிகாரமானது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தீரா கடன் தீர பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். கடன் அடைய வேண்டும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றாலே அதற்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான் அதில் ஒன்றும் மாற்றமில்லை. செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் சிறந்த பலனை தரும்.

இந்த பரிகாரம் செய்வதற்கு நீங்கள் மைசூர் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மைசூர் பருப்பை நீங்கள் அப்படியே பருப்பாகவும் வைத்து செய்யலாம் அல்லது அந்த பருப்பில் ஏதேனும் ஒரு இனிப்பு வகை செய்து அதை வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம் அது உங்கள் விருப்பம். இந்தப் பருப்பை அல்லது பருப்பினால் செய்த இனிப்பை அருகில் உள்ள சிவாலயத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வேலையில் கொண்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

அங்கு சிவபெருமானிடம் இந்த பருப்பு அல்லது இனிப்பு என நீங்கள் எதை கொண்டு சென்றீர்களோ அதை வைத்து மனமார உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று வணங்க வேண்டும். அதன் பிறகு இந்த பருப்பை நீங்கள் கையில் வைத்துக் கொண்டு கீழ்வரும் மந்திரத்தை சொல்ல வேண்டும்

ஓம் ரின் முக்தேஸ்வராய நமஹ

இந்த மந்திரத்தை 108 முறை மனதார சொல்லுங்கள். இந்த மந்திரத்தை சொல்லும் வேளையில் உங்கள் கடன் முழுவதுமாக அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே சொல்லுங்கள். இந்த பரிகாரத்திலேயே இந்த மந்திரம் தான் மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில் இந்த பருப்பையோ அல்லது அதனால் செய்த இனிப்பையோ நீங்கள் கீழே வைத்து விடாமல் உங்கள் கையிலே வைத்துக் கொண்டு சொல்லுங்கள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு கையில் உள்ள பருப்பு அல்லது இனிப்பை ஆலயத்திற்கு வருபவர்களுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது இதுவரையில் தீராத கடன் எல்லாம் தீர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க வாராகி வழிபாடு

எந்த ஒரு பரிகாரத்தையும் முழுமனதுடன் நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் அதற்கான பலன் உண்டு. அதே நேரத்தில் நம்முடைய உழைப்பையும் முயற்சியும் கைவிடக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடன் அடைய செய்யக் கூடிய இந்த எளிய பரிகார முறையில் உங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -