நம்மை விடாமல் துரத்தும் கடன் பிரச்சினையை விரைவில் விரட்டி அடிக்க, வேப்பெண்ணை தீபத்தை இப்படி ஏற்றினால் போதும்.

kadan
- Advertisement -

வேப்பெண்ணை என்றாலே நம் நினைவிற்கு வருவது கசப்பு தான். கசப்பு என்றதுமே நாம் எல்லோரும் இந்த வேப்பெண்ணெயை பார்த்து பயப்படுகிறோம். வீட்டில் வேப்பெண்ணை தீபத்தை ஏற்றலாமா? வீட்டில் வேப்பெண்ணை தீபம் ஏற்றுவதால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்ற மனபயம் இன்றளவிலும் நமக்கு இருந்து வருகிறது. வேப்பெண்ணை கசப்பு தன்மை உடையது தான். நம் வாழ்வில் இருக்கும் கசப்பான அனுபவங்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது வேப்பெண்ணெய். வயிற்றில் புழு பூச்சிகள் இருந்தால் கூட இந்த வேப்பெண்ணெயை உள்ளுக்கு சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்று சொல்லுவார்கள்.

veppa-ennai

நம் வாழ்க்கையில், நமக்கு வரக்கூடிய தேவையற்ற பிரச்சனைகளை நம்மிடம் இருந்து அகற்றும் வேலையையும் இந்த வேப்பெண்ணெய் செய்யும். அந்த வரிசையில் நமக்கு இருக்கும் பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை தீர்வதற்கு, கெட்ட சக்தியிடம் இருந்து தப்பிப்பதற்கு, நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்கு வேப்பெண்ணை தீப வழிபாட்டை நம்முடைய வீட்டில் எப்படி மேற்கொள்ளலாம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வீட்டில் இருக்கக் கூடிய வறுமை நீங்க வேண்டும். பணக்கஷ்டம் தீர வேண்டும். கடன் சுமை படிப்படியாக குறைய வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு 6 லிருந்து 7 மணிக்குள் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் வேப்பெண்ணை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பூஜை அறையில் வைத்து வணங்கலாம். அதாவது இந்த வேப்பெண்ணை தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார இறைவனிடம் வேண்டிக் கொண்டால், அந்த கசப்பான கஷ்டம் உங்களை விட்டு நீங்குவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

kadan

நிறையப் பேர் தீராத வியாதியினால் பல நாட்கள் அவதிப்பட்டு வருவார்கள். மருத்துவரிடம் சென்று தீர்த்து வைக்க முடியாத நோய்கள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நோயில் இருந்து படிப்படியாக விடுபட, நோய்க்கு உண்டான தீர்வை பெற, சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வேப்பெண்ணை தீபத்தை ஏற்றி வைத்து நோய் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

சில பேருக்கு கண் திருஷ்டி, ஏவல் பில்லி, சூனியம் இப்படி கெட்ட சக்தியின் மூலம் நிறைய பாதிப்புகள் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு இரவில் தூக்கம் கூட வராது. கெட்ட கனவுகள் வந்து தொந்தரவு கொடுக்கும். இந்த பிரச்சனை தீர்வதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வேப்பெண்ணை தீபத்தை ஏற்றி பிரார்த்தனை செய்து கொண்டால் கெட்ட சக்திகளிடமிருந்து வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

sleep-paralysis

கட்டாயமாக வீட்டில் மண் அகல் தீபத்தில் வேப்பெண்ணை ஊற்றி தீபம் ஏற்றவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குத்துவிளக்கிலோ அல்லது வீட்டில் இருக்கும் காமாட்சியம்மன் விளக்கிலோ வேப்பெண்ணை ஊற்றி தீபம் ஏற்றக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேல் சொன்ன விஷயங்களை எத்தனை நாட்கள் கடைபிடிப்பது என்ற சந்தேகம் நிச்சயமாக எல்லோருக்கும் வரும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் தொடர்ந்து 48 வாரம் இந்த தீப வழிபாட்டை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -