கடன் தீர செல்வம் சேர ஏலக்காய் வைத்து செய்யும் 3 எளிய பரிகாரங்கள்

lakshmi
- Advertisement -

பணம் இருந்தால் நிம்மதி இருக்காது, நல்ல குடும்பம் இருந்தால் நல்ல வேலை இருக்காது, நல்ல தொழில் இருந்தால் அதில் லாபம் இருக்காது, நல்ல வேலை இருந்தால் நல்ல சம்பளம் இருக்காது இவ்வாறு மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு குறைபாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு நாம் வாழும் வாழ்க்கை என்பது நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையை பொருத்தும் உடன் இருக்கும் மனிதர்களை பொறுத்தும் தான் அமைகிறது. அவ்வாறு நம்மைச் சுற்றி எதிர்மறை சக்திகள் அதிகமாக இருந்தால் நம்மிடம் பணம் சேர்வதிலும் நல்லது நடப்பதிலும் எப்பொழுதும் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவ்வாறு நம்மை சுற்றியுள்ள சூழ் நிலையை சரிசெய்து நேர் மறை சக்திகளை நம்மிடம் ஈர்ப்பதற்கு நம்மிடம் இருக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும். வாருங்கள் ஏலக்காய் வைத்து செய்யக்கூடிய பரிகாரம் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

cash

நமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடமாநிலத்தவர்கள் நம்மைவிட எப்பொழுதும் வியாபாரத்தில் சிறந்து விளங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் பின்பற்றும் சில முக்கிய தாந்திரீக வழிபாடுகளாகும். இவற்றை அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள். அவ்வாறு ஏலக்காய் வைத்து செய்யும் இந்த சிறப்பு பரிகாரத்தை இருபத்தியோரு நாட்கள் தொடர்ந்து செய்து வர நமது பிரச்சினைகள் தீர்ந்து நமது வாழ்க்கை சிறக்க நல்ல வழி பிறக்கும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலை அல்லது மாலை வேளையில் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி விட்டு, உள்ளங்கையில் மூன்று ஏலக்காயை வைத்துக் கொண்டு கைகளை மூடி பூஜை அறையின் முன் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக” என்று கண்களை மூடி மகா லட்சுமி தாயாரை நினைத்து 108 முறை சொல்ல வேண்டும். பிறகு அப்படியே எழுந்து வீட்டில் இருக்கும் அனைத்து அறைகளுக்கும் சென்று வலது புறமாக ஏழு சுற்று சுற்றி விட்டு, மீண்டும் பூஜை அறையின் முன்பு வந்து இந்த ஏலக்காயை சிவப்புத் துணியில் வைத்து, சிகப்பு நூல் பயன்படுத்தி மூட்டையாக கட்டி வீட்டில் எவர் கண்ணும் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும்.

hand

இருபத்தியோரு நாட்கள் கழித்து இந்த மூட்டையை ஓடும் தண்ணீரில் அல்லது அரச மரம், வேப்ப மரம், மருதாணி மரம், ஆலமரம் போன்ற ஏதாவது ஒரு மரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து விட வேண்டும். நிச்சயம் இருபத்தியோரு நாட்கள் கழித்து உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

- Advertisement -

அதுபோல் 101 ஏலக்காயை ஊசி நூல் வைத்துக் கோர்த்து கொண்டு வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு மாலையாக அணிவித்து பூஜை செய்து வந்தால் கடன் தொல்லைகள் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.

elakkai-maalai

அவ்வாறு மூன்று ஏலக்காயை தினமும் விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்து வந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். பொதுவாகவே ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சகமாக பார்க்கப்படுகிறது. இதற்கு நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை அழித்து நேர்மறை சக்திகளை ஈர்க்கின்ற மகிமை வாய்ந்த சக்தி இருக்கிறது.

- Advertisement -