அரளிப் பூ இருந்தால் போதும். கடன் அலறி அடித்து கொண்டு ஓட்டம் எடுக்கும். கடன் இல்லாமல் நாமும் நிம்மதியாக வாழலாம்.

arali
- Advertisement -

கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தால் ஒரு மனிதனுக்கு எத்தனை நிம்மதி இருக்கும். நம்மில் ஒருவரால் கூட இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாத சூழ்நிலையில் நிற்கின்றோம். கைநீட்டி வட்டிக்கு கடன் வாங்கவில்லை என்றாலும் இ.எம்.ஐ என்ற பெயரில் நாம் எல்லோர் தலை மீதும் ஏதோ ஒரு கடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அப்படி இல்லை என்றால் பர்சனல் லோன். அதுவும் இல்லையா கிரெடிட் கார்டு. சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் போல இன்றைய சூழ்நிலையில் கடன் இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. அந்த அளவிற்கு கொண்டு போய் இந்த டெக்னாலஜி நம்மை நிறுத்திவிட்டது.

நாமே நினைத்தால் கூட கடன் இல்லாமல் வாழ முடியாது. சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். தலைவலியான இந்த கடன் பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு பரிகாரத்தை பார்த்து விடுவோம். வாந்திய கடனை எப்படியாவது கொடுத்து தான் ஆக வேண்டும். கடனை படிப்படியாக குறைக்க கடனில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க, ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்துதானே ஆக வேண்டும். இந்த சுலபமான பரிகாரம் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர எல்லோருக்கும் கை கொடுக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு அரளி பூ தேவை. செவ்வரளி பூ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிச்சயம் பூஜை செய்பவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. பூஜை அறையை அலங்காரம் செய்து கொண்டு இந்த அரளி பூவை தாம்புல தட்டில் பரப்பி வைத்து விட்டு, அதன் நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்து அந்த அகலில் நல்லெண்ணெய் ஊற்றி, 2 ஏலக்காய், 2 கிராம்பு, மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார குலதெய்வத்திடம், சூரிய பகவானிடமும் உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இவ்வளவு தான் பரிகாரம். விளக்குக்கு முன்பு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரை சொல்லி, எவ்வளவு கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டுமோ, அந்த தொகையையும் சொல்லி சீக்கிரம் அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கான வாய்ப்பை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தர வேண்டும் என்று தெளிவாக வேண்டிக் கொள்ளுங்கள். இத்தனை விஷயங்களையும் நீங்கள் மனதார நினைக்க வேண்டும்.

- Advertisement -

இதே போல தொடர்ந்து ஐந்து வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை வீட்டில் ஏற்றி வர நிச்சயமாக கடன் சுமை குறைய ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். இந்த பூஜையை ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். பெண்கள் பூஜை செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கும் போது வீட்டில் இருக்கக்கூடிய மற்றவர்களை இந்த தீபத்தை ஏற்றுச் சொல்லலாம். ஆனால் 5 வார ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து இந்த பரிகார தீபத்தை வீட்டில் ஏற்றும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பிரார்த்தனையை முடித்துவிட்டு கற்பூர தீப ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த தீபச்சுடர் விளக்கில் எண்ணெய் தீரும் வரை அப்படியே எரியட்டும். பூக்கள் வாடியவுடன் கால் படாத இடத்தில் போட்டு விடலாம். விளக்கில் இருக்கும் ஏலக்காய் கிராம்பையும் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மறுவாறும் இதே போல பூஜையை செய்து வாருங்கள். நம்பிக்கையோடு இந்த ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வரும் போது உங்களுடைய வருமானத்தில் மாற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைக்கான தீர்வு நிச்சயமாக கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -