கடலளவு கடனும், கடுகளவு குறைய ஒரே 1 கருமஞ்சலை வீட்டில் இப்படி வைத்தால் போதும்.

karumanjal
- Advertisement -

கடன் பிரச்சனையால் உங்களுடைய வாழ்க்கையே இருளில் மூழ்கி உள்ளதா. அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த கருமஞ்சல் உங்களுக்கு உதவியாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கும் கரும் மஞ்சளுக்கு, நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுக்கக் கூடிய சக்தி மிக மிக அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது. கருமஞ்சலை நாம் எந்த இடத்தில் வைக்கிறோமோ அந்த இடத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விளக்கப்படும். நேர்மறை ஆற்றல்களை தரக் கூடிய சக்தி இந்த கரு மஞ்சளுக்கு உண்டு.

karu-manjal

கரு மஞ்சளின் மகத்துவமும் மகிமைகளும் ஏராளம். அதில் ஒரு சில வற்றை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அந்த காலத்தில் கரு மஞ்சளின் மகிமை அனைவருக்கும் நன்றாக தெரிந்ததே. இடைப்பட்ட காலத்தில் மூலிகைகளின் மகிமைகளை நாம் மறந்து விட்டோம். அந்த வரிசையில் காணாமல் போன பொருட்களில் இந்த கரு மஞ்சளும் ஒன்று.

- Advertisement -

கரும் மஞ்சளுக்கு இயற்கையாகவே எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தியும், நேர்மறை ஆற்றலை கவரக் கூடிய சக்தியும் அதிகமாகவே உள்ளது. உங்களுக்கு நிறைய கடன் உள்ளதா.‌ முதலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கல் உப்புக்கு நடுவே ஒரு சிறிய துண்டு கருமஞ்சல் வைத்து உள்ளங்கைகளை மூடிக் கொள்ளுங்கள்.

கடன்சுமை காற்றோடு காற்றாக கண்ணுக்கே தெரியாமல், கஷ்டமே தராமல் கரைந்து போக வேண்டுமென்று மகாலட்சுமி தாயை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை அறையில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். மனமுருகி 10 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து வேண்டுதலை வைக்க வேண்டும். மனதை அலைபாய விடக்கூடாது. மனதை ஒருநிலைப் படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

வேண்டுதல் முடித்தவுடன் கையில் இருக்கும் கருமஞ்சலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். உள்ளங்கைகளில் இருக்கும் கல் உப்பை கடன் கரைய வேண்டும் என்று ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து விடுங்கள். இந்த தண்ணீரை சிங்கிள் கொட்டிவிடலாம். பரிகாரத்துக்கு பயன்படுத்திய கருமஞ்சல் இருக்கிறதல்லவா. அதை தினம்தோறும் ஒரு சிறிய கல்லில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இழைத்து அந்த கருமஞ்சலை நெற்றியில் இட்டு வர வேண்டும்.

uppu

வசிய தன்மை வாய்ந்த இந்த கருமஞ்சள் உங்களுக்கு பணவரவை கொடுக்கும். கடனை அடைப்பதற்கு தேவையான பணம் உங்கள் கைக்கு விரைவாக வர ஆரம்பிக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். அதற்கான நேர்மறை ஆற்றலைக் கொடுக்கக்கூடிய சக்திதான் உங்கள் நெற்றியில் இருக்கும் கருமஞ்சல் திலகம்.

இதை எத்தனை நாட்கள் நெற்றியில் இட்டுக் கொள்வது. ஒரு சிறிய மஞ்சள் கிழங்கை கல்லுப்புடன் வைத்து நீங்கள் சக்தியூட்டி வைத்திருக்கிறீர்கள். அந்த மஞ்சளை லேசாக இழைத்துதான் நெற்றியில் இட்டு வரப் போகிறீர்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு கருமஞ்சல் போதுமானது. முதலில் பரிகாரம் செய்த கருமஞ்சல் தீர்வதற்குள், உங்களுடைய கடன் கரைந்து விட்டால் பரிகாரத்தை மீண்டும் செய்ய வேண்டாம். கடன் பிரச்சனை தீராமல் தொடர்ந்து கொண்டே வந்தால் மீண்டும் ஒருமுறை கல் உப்பில் கருமஞ்சள் வைத்து மனதார மகாலட்சுமியின் வேண்டிக் கொண்ட அந்த கருமஞ்சள் மீண்டும் நெற்றியில் வைக்க தொடங்க வேண்டும். கடன் தீரும் வரை இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் உங்கள் கடன் காணாமல் போகும்.

mahalakshmi1

உங்களுடைய கடன் தொகை உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் இவைகளைப் பொறுத்து தான் பரிகாரம் பலன் தரும். உங்களுக்கான தீர்வை படிப்படியாக அந்த ஆண்டவன் காண்பித்துக் கொடுப்பான். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -