நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் கடன்கள் தீர கலசம் அமைப்பது எப்படி? இந்த எளிய பரிகாரம் செய்து பாருங்கள் எவ்வளவு கடன் இருந்தாலும் விரைவாக தீரும், வருமானம் பெருகும்!

kalasam-sembu-lakshmi
- Advertisement -

நம் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று கடன் பிரச்சினையாக இருக்கக்கூடும். என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவர்களுக்கும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப கடன் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. மனிதன் ஆசையை துறந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று கூறுவார்கள். இந்த ஆசை தான் கடன் வாங்கவும் தூண்டுகிறது. இப்படி நம் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் கடன்கள் ரொம்ப எளிதாக தீருவதற்கு செய்யக்கூடிய ஆன்மீக பரிகாரம் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்

தீராத கடன்கள் தீர முதலில் மகாலட்சுமிக்கு கலசம் அமைத்து வழிபட வேண்டும். எளிமையான முறையில் இந்த கலசம் அமைத்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் சகல கடன்களும் தீர்ந்து செல்வம் சேரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பாரம்பரியமாக செய்து வரும் இந்த கலச பரிகாரம் கடன்களை மட்டும் அல்லாமல், நம் வருமானத்தையும் பெருக்கும் ஆற்றல் கொண்டது.

- Advertisement -

கரன் தீர வேண்டும் என்றால் வருமானம் பெருக வேண்டும். வீட்டில் இருக்கும் தேவைக்கு ஏற்ப வருமானம் வந்தால் மட்டும் போதாது, கூடுதல் வருமானம் வந்தால் தான் கடன்களும் தீரும் எனவே இத்தகைய வருமானத்தை கொடுக்கக்கூடிய பரிகாரமாகவும் இது இருந்து வருகிறது. அதனால் தான் கடன் தொல்லைகள் தீர்ந்து செல்வம் பெருகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்து பச்சரிசியால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் மகாலட்சுமியை இருக்கையில் அமர வைத்து மல்லிகை, தாமரை அல்லது முல்லை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த மலர்களாக இவை இருக்கின்றன. பின்னர் ஒரு மண் கலசம் அல்லது பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் ஆன கலசத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கலசத்தை சுற்றிலும் மஞ்சள் பூசிக் கொள்ள வேண்டும். மஞ்சள் நன்கு கெட்டியாக குலைத்து கலசம் முழுவதும் வெளிப்புறமாக பூசிக் கொள்ளுங்கள். பின்னர் சுற்றிலும் மூன்று அல்லது ஐந்து என்கிற எண்ணிக்கையில் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலசத்தை ஒரு வெற்றிலை மீது வைக்க வேண்டும் அல்லது வாழை இலையில் பச்சரிசியை பரப்பி அதன் மீதும் வைக்கலாம்.

கலசத்தினுள் பன்னீர் அல்லது சாதாரண தண்ணீர் ஊற்றி வையுங்கள். உங்கள் கைகளால் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள், ஒரு சிட்டிகை அளவுக்கு குங்குமம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் மற்றும் குங்குமம் மங்கலம் தரும் பொருட்களாகும். இது மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்தமானது. பின்னர் ஒரு கைப்பிடி அரிசி, ஒரு கைப்பிடி பருப்பு, சில்லறை நாணயங்கள் சேர்க்க வேண்டும்.

பிறகு வாசனை பொருட்களாக இருக்கும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு மற்றும் சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து தீர்த்தம் போல தயாரித்து வைக்க வேண்டும். கலசத்தை சுற்றிலும் பூவால் அலங்கரித்து பின்னர் இரண்டு புறமும் குத்து விளக்கு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நைவேத்தியமாக சாதாரண கற்கண்டு அல்லது உலர் திராட்சைகள் வைக்கலாம். ரொம்ப எளிதாக தயாரித்து மகாலட்சுமி ஸ்தோத்திரங்கள், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை உச்சரித்து தீப, தூப, ஹாரத்தி காண்பிக்க வேண்டும். இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்து வர உங்களுடைய வருமானம் விரைவாகவே பெருக துவங்கும். இதனால் கடன்கள் தீர்ந்து செல்வ வளமானது பெருகும்.

- Advertisement -