இதை மட்டும் மண்ணில் புதைத்து வையுங்கள். உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் கடன் தொல்லை விரைவில் தீர்ந்துவிடும்

cash
- Advertisement -

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களுக்கு பின்னால் பலநூறு அர்த்தங்கள் இருக்கின்றன. வீடு கட்டும்போதும், கிணறு தோன்றும் போதும் நிலைவாசல் அல்லது சில சூட்சமமான இடங்களில் ஓட்டை கலனாவையும், வசதி உள்ளவர்கள் வெள்ளி நாணயத்தையும், அரச குலத்தைச் சார்ந்தவர்கள் தங்க நாணயத்தையும் அந்த இடத்தில் புதைத்து வைப்பார்கள். இவ்வாறு செய்வதற்கு காரணம் என்னவென்றால் அந்த இடம் மற்றும் அந்த இடத்தில் வாழக்கூடியவர்கள் எப்போதும் செல்வ வளங்கள் நிறைந்து, மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இன்றைய சூழலில் இவ்வாறான சம்பிரதாயங்களை எல்லாம் பலரும் கடைபிடிப்பதில்லை. இவற்றிர்க்கு பதிலாக இதற்கு ஈடான பலன் கொடுக்கும் ஒரு சிறந்த பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

home

வாரந்தோறும் மங்கள நாளான வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் போல வீட்டை கழுவி சுத்தம் செய்து, பூஜை அறையை தூய்மை செய்து, வீட்டில் உள்ள பெண்கள் தலைக்கு குளித்துவிட்டு, சாமி படங்களுக்கும் பூஜை பாத்திரங்களுக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, மலர் சூடி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திட வேண்டும்.

- Advertisement -

அதன்பின் சிறிதளவு மஞ்சள்தூள் எடுத்துக்கொண்டு, அதனுடன் பன்னீர் சேர்த்து குழைத்து, அந்த மஞ்சளில் பிள்ளையார் பிடித்துக் கொண்டு, அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து விட வேண்டும். பின்னர் ஒரு வெற்றிலையின் மீது மஞ்சள் பிள்ளையாரை வைத்து அதனை பூஜை அறையில் வைக்க வேண்டும்.

manjal-pillaiyar3

அதன்பின் ஆறு பழைய ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொண்டு அதனை வலது கையில் வைத்துக்கொண்டு, பூஜை அறையின் முன்நின்று ஒரு மஞ்சள் நிறத் துணியில் அந்த ஆறு நாணயங்களையும் வைத்து, ஒரு மூட்டையாக கட்டி அதையும் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வத்தை நினைத்து எனக்கு பிரச்சனை கொடுக்கும் கடன்கள் அனைத்தும் தீர்ந்து மனநிம்மதியும் சுகமான வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த மஞ்சள் நிற பிள்ளையாருக்கும், நாணயம் வைத்துள்ள முடிடிச்சிற்க்கும் தீப தூப ஆராதனை காண்பித்த பின், அதனை கையில் எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டின் வெளிப்புறம் வடகிழக்கு திசையை நோக்கியவாறு நின்று கொள்ள வேண்டும்.

manjal-mudichu

பின்பு வெற்றிலையில் வைத்திருக்கும் விநாயகரையும், நாணயம் வைத்திருக்கும் முடிச்சையும் வலது கையில் வைத்துக் கொண்டு ஓம் எனும் மந்திரத்தை 60 முறை சொல்லி இவை இரண்டையும் மண்ணில் சிறிய அளவு பள்ளம் தோண்டி அவற்றினை அதில் வைத்து புதைத்து விட வேண்டும். அதன்பின் தொடர்ந்து முப்பத்தி மூன்று தினங்கள் மஞ்சளை நீரில் கரைத்துக் கொண்டு ,ஓம் எனும் மந்திரத்தை 6 முறை சொல்லி, மஞ்சள் நீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். இறுதியாக இருக்கும் மஞ்சள் நீரை நாணயங்களை புதைத்து வைத்திருக்கும் இடத்தில் ஊற்றிவிட வேண்டும்.

இந்த பரிகாரத்தை முறையாக செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வளங்கள் நிறைந்து, உங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் கடன் தொல்லைகள் விரைவாக தீர்ந்துவிடும்.

cash

குறிப்பு: சொந்த வீடு இல்லாதவர்களும், வீட்டின் முன்பு மண் இல்லாதவர்களும் ஒரு சிறிய தொட்டியில் மண்ணை நிரப்பி, அதனை வடகிழக்கு மூலையில் வைத்து இவ்வாறு நாணயத்தை புதைத்து வைக்கலாம்.

- Advertisement -