கடன் பிரச்சனை வேரோடு அழிய, உங்கள் கையால் வேப்ப எண்ணெயில் இதை எழுதினாலே போதும்.

cash3
- Advertisement -

நமக்கு தற்போது இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை மட்டும் தீர்த்துக் கொண்டால் போதாது. நாமும் நம் குடும்பமும் காலத்திற்க்கும் கை நீட்டி கடனாக பணத்தை அடுத்தவர்களிடம் வாங்கவே கூடாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கடன் வாங்கும் பழக்கத்தை வேரோடு அகற்ற வேண்டும் என்றால், தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனையை கடன் வாங்கும் பழக்கத்தை வேரோடு அழிப்பதற்கு இதை விட சுலபமான பரிகாரத்தை நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால் சுலபமான பரிகாரம் என்பதால், பரிகாரத்தை குறித்தும் எடைபோட வேண்டாம். நம்பிக்கையோடு இதை ஒரே ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தெரியும்.

சுத்தமான வேப்பெண்ணையை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி எடுத்து வரவேண்டும். பூஜை அறையில் அமர்ந்து குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்‌. வாங்கி வந்த வேப்பெண்ணையை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வலதுகை ஆள்காட்டி விரலால் அந்த வேப்ப எண்ணெய்யை தொட்டு, வெள்ளை காகிதத்தில் ‘எங்கள் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சனை வேரோடு அழிய வேண்டும்’ என்று எழுதி அந்த பேப்பரை நான்காக மடித்து கொள்ளுங்கள். ஒரு சிறிய சாம்பிராணி தூபம் போடும் தூபக்கால் இருந்தால் கூட போதும். அதில் கட்டி கற்பூரத்தை வைத்து, சூடம் ஏற்றி நீங்கள் வேப்பெண்ணையில் எழுதி வைத்துள்ளீர்கள் அல்லவா, அந்த காகிதத்தை அப்படியே கற்பூர நெருப்பில் போசுக்கிவிட வேண்டும்.

இந்த சாம்பலை அப்படியே வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இரவு நேரத்தில் 8 மணிக்கு மேல், 10 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை பூஜை அறையில் செய்யலாம். பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு எரிந்த சாம்பலை கால் படாத இடத்தில் கொட்டி விட்டு முகம் கைகால்களை அலம்பி கொள்ளுங்கள்.

- Advertisement -

தொடர்ந்து 27 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். முதல் நாள் எந்த நேரத்தில் பரிகாரத்தை செய்ய தொடங்கினீர்களோ, அடுத்தடுத்த நாளும் பரிகாரத்தை அதே நேரத்தில் தான் செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்யத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே, உங்களுடைய கடன் பிரச்சனையில் சில மாற்றங்கள் வருவதை உங்களால் உணர முடியும். பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு கடனை அடைப்பதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுக்காமல் இருக்க கூடாது.

பணத்தை திருப்பித் தர செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் கட்டாயம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். கடன் வாங்கக்கூடாது என்ற உறுதிமொழியை இறைவன் முன்பாக தினம்தோறும் எடுத்துக் கொண்டே இருங்கள். சேமிப்பை படிப்படியாக உயர்த்துங்கள். நீங்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட மாட்டீர்கள்

இந்த பரிகாரம் கடன் பிரச்சினைக்கு மட்டுமா? நிச்சயம் கிடையாது. உங்கள் மனம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், அந்த குறிப்பிட்ட பிரச்சனையை வேப்பெண்ணையை தொட்டு காகிதத்தில் எழுதி, அந்த காகிதத்தை கற்பூரத்தின் நெருப்பில் பொசுக்கினால் அந்த கசப்பான கஷ்டம் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பயப்பட எதுவுமே கிடையாது. குலதெய்வத்தை நினைத்து, இறைவனின் ஆசீர்வாதத்தோடு செய்யக்கூடிய பரிகாரம் தான் இது. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -