இந்த வார்த்தையை மனதில் சொல்லிக் கொண்டே கைநீட்டி கடன் வாங்கி பாருங்கள். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக சொன்ன தேதியில் திருப்பி கொடுத்து விடலாம்.

book-murugan
- Advertisement -

வியர்வையை ரத்தமாக சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை யாரோ ஒருவருக்கு கொண்டு போய் வட்டி கட்ட கூடிய கஷ்டம் இருக்கிறதே, அது கடனை வாங்கி திருப்பித் தர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வாஸ்தவம் தான், கைநீட்டி கடன் வாங்கி விட்டோம். மாதம் அதற்கு வட்டி கட்டி தான் ஆக வேண்டும். அதற்காக வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வட்டி கொடுத்திருப்போம். ஆனால் அந்த ஒரு லட்ச ரூபாய் அசலை நம்மால் திருப்பித் தர முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். கைநீட்டி வாங்கும் போது இந்த தேதியில் கடனை திருப்பித் தருகின்றேன் என்று சொல்லி கை நீட்டி கடன் வாங்குவோம்.

ஆனால், நூற்றில் ஒருவரால் கூட சொன்ன தேதிக்கு கடனை திருப்பித் தர முடியாத சூழ்நிலை உண்டாகும். கைநீட்டி வாங்கிய கடனை சொன்ன தேதியில் திருப்பித் தர வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும். கடன் வாங்கும் போது செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இனி கடன் வாங்கும் போது இந்த ஐடியாவை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக கடனை திருப்பித் தருவதில் பெரிய அளவில் சிரமம் எதுவும் இருக்காது.

- Advertisement -

கடனை கைநீட்டி வாங்கும் போது சொல்ல வேண்டிய வார்த்தை:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு துணையாக நிற்கப்போவது அந்த முருகர் தாங்க. கடனை வாங்க செல்லும்போது உங்களுடைய வலது உள்ளங்கையில் நட்சத்திர கோலம் போட்டு, அதை சுற்றி ‘ஓம் சரவணபவ’ என்று எழுதிக்கொண்டு செல்லுங்கள். கைநீட்டி கடன் வாங்கும் போது உங்களுடைய மனதிற்குள் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே கடனை வாங்கி பாருங்கள். வாங்கிய கடனை சொன்ன தேதியில் திருப்பி தந்து விடுவீர்கள்.

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேனா பேப்பர் கண்டுபிடிக்காத காலத்திலேயே குச்சியில் மண்ணில் இந்த நட்சத்திரத்தை வரைந்து அதில் ஓம் சரவணபவ என்று எழுதி கடனை கொடுத்தவர்கள் உள்ளார்கள். காரணம் கடன் தொகையை சீக்கிரம் வசூல் செய்ய வேண்டும். கைநீட்டி கடன் வாங்கியவர்கள் அதை திருப்பித் தர முடியாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பரிகாரம் ஆதி காலத்திலேயே நம் முன்னோர்களால் பின்பற்றி வரப்பட்டது.

- Advertisement -

நிறைய பேர் அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும்போது அவர்களால் அந்தக் கடனை திருப்பிக் கொடுக்கவே முடிய கூடாது. காலத்திற்கும் வட்டி கட்டி கொண்டே இருக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடும் கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சூட்சம வித்தையை செய்பவர்களுடைய தந்திரத்தை கூட முறியடிக்க கூடிய சக்தி இந்த நட்சத்திர பரிகாரத்திற்கு உண்டு.

எப்பேர்ப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர்களிடம் கைநீட்டி கடனை வாங்கினாலும், அதை கூடிய சீக்கிரத்தில் திருப்பி தர வேண்டும் என்றால் மேல் சொன்ன இந்த நட்சத்திர பரிகாரத்தை செய்யலாம். கடனை கைநீட்டி வாங்கும் போது, ஓம் சரவணபவ என்ற உச்சரிக்கும் போது அந்த முருகப்பெருமான் உங்களுடனே இருப்பார் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர 7 கிராம்பு போதும்

எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும் சரி அது சம்பந்தமாக பேசப்போகும் போது கையில் இந்த நட்சத்திரத்தை வரைந்து ஓம் சரவணபவ என்று எழுதிக் கொள்ளுங்கள். மனதில் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். பண பிரச்சனை பஞ்சு பஞ்சாக பறந்து போகிறதா இல்லையா என்பதை நீங்களே பாருங்கள். நம்பிக்கையோடு செய்ய வேண்டிய பரிகாரம் இது. 100% ரிசல்ட்டை கொடுக்கும் பரிகாரம் இது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் ஆன்மீகம் பின்பற்றி பார்க்கலாம் என்ற கருத்தோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -