எவ்வளவு பெரிய கடனையும் கச்சிதமாக அடைத்துவிடலாம். வெற்றிலையில் உங்களது கடன் தொகையை இப்படி எழுதினால் போதும்.

vetrilai-cash
- Advertisement -

கடன் அடைவதற்கும், பணப்பிரச்சனை தீருவதற்கும் ஏராளமான பரிகாரங்கள் தாந்திரீக ரீதியாக நமக்குச் சொல்லப்பட்டு உள்ளது. அதில் ஒரு சுலபமான சுவாரசியமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான பரிகாரம் மட்டும் அல்ல இது. சக்தி வாய்ந்த பரிகாரமும் கூட. பெரும்பாலும் தாந்திரீக ரீதியான பரிகாரங்கள் பலிப்பதற்கு முதல் காரணம், நாம் அந்த பரிகாரத்தின் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை. நம்பிக்கை இல்லாமல் எந்த பரிகாரத்தை நாம் செய்தாலும் நிச்சயமாக அது நமக்கு பலன் தராது. முழு நம்பிக்கையோடு நம்முடைய கடன் நிச்சயம் அடையும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோமா.

Durgai amman

இந்த பரிகாரத்திற்கு இரண்டு வெற்றிலைகள் நமக்கு தேவை. கொஞ்சம் போல சுத்தமான வாசனை நிறைந்த குங்குமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தாழம்பூ குங்குமம் கிடைத்தால் மிகச் சிறப்பு. பூஜை அறையில் அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு வெற்றிலையின் மேல் குங்குமத்தை வைத்துவிடுங்கள். இன்னொரு வெற்றிலையில் உங்களுடைய பேனாவால், உங்களுடைய கடன் தொகையை எழுதி, அந்த கடன் கூடிய விரைவில் அடைய வேண்டும் என்று எழுதிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எடுத்துக்காட்டுக்கு உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்கிறது என்றால், ‘1,00,000 ரூ கடன் சீக்கிரமே அடைத்து விட வேண்டும்’ என்று ஒரு வெற்றிலையில் 9 முறை எழுத வேண்டும். ‘கடன் அடைய பணம் தேவை’ என்று கூட எழுதிக் கொள்ளலாம் அது நம்முடைய விருப்பம் தான். வெற்றிலையின் முன்பக்கம் பின்பக்கம் இரண்டு பக்கத்திலும் வெற்றிலைக் கிழியாமல் லேசாக பேனாவை வைத்து எழுதி விடுங்கள். இப்போது குங்குமம் வைத்திருக்கும் வெற்றிலை, நீங்கள் கோரிக்கையை எழுதி வைத்திருக்கும் வெற்றிலை, இந்த இரண்டு வெற்றிலையையும் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் துர்க்கை அம்மனுடைய சுவாமி படத்தின் காலடியில் வைத்து விடுங்கள்.

blue-durga

உங்களுடைய வீட்டில் துர்க்கை அம்மனின் திருவுருவ படம் இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு அம்மனின் பாதங்களில் இந்த இரண்டு வெற்றிலையையும் வைத்துவிட்டு ‘ஓம் துர்கா தேவியே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட வேண்டும். இறுதியாக அம்மனுக்கு தீப தூப ஆராதனைகள் காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். (பரிகாரத்துடன் நீங்கள் முழு நம்பிக்கையோடு இந்த இடத்தில் வேண்டுதல் வைக்க வேண்டும். அதுதான் முக்கியம்.)

- Advertisement -

ஒரு வெற்றிலையில் இருக்கக்கூடிய குங்குமத்தை தினம்தோறும் நீங்கள் நெற்றியில் இட்டு வர வேண்டும். நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது துர்க்கை அம்மனை மனதார நினைத்து உங்களுடைய கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

agal-vetrilai

நம்முடைய பிரார்த்தனையை எழுதிய வெற்றிலையை, அப்படியே ஒரே பேப்பரில் மடித்து தூரமாக மனிதர்கள் கால் படாத ஏதாவது ஒரு இடத்தில் போட்டுவிட்டு வந்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறிய பள்ளம் தோண்டி அதனுள்ளே புதைத்து வைத்தாலும் சரிதான். அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

இந்த பரிகாரத்தை எந்த கிழமையில், எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். வெற்றிலையில் நாம் எந்த கோரிக்கையை நினைத்து எழுதுகின்றோமோ, அது நிச்சயமாக நடக்கும். இந்த பரிகாரம் என்று மட்டும் கிடையாது. சாதாரணமாக உங்களுக்கு ஏதேனும் விருப்பம் இருந்தால், அது கூடிய விரைவில் நிறைவேற வேண்டுமென்றால் ஒரு வெற்றிலையை எடுத்து அந்த வெற்றிலையில் உங்களுடைய வேண்டுதலை எழுதி பூஜை அறையில் வையுங்கள். அந்த வேண்டுதல் சீக்கிரத்திலேயே நடக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -