கடவுளுக்கும் உங்களுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமா? உங்கள் கையில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டாலே போதும்.

pray
- Advertisement -

சில பேரால் இறைவழிபாட்டை மனநிறைவோடு செய்ய முடியாது. கண்களை மூடி சாமி கும்பிட முடியாது. ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்து அந்த மந்திரத்தை சித்தி செய்துகொள்ள முடியாது. கண்களை மூடி தியான நிலையில் மனதை ஒரு நிலைப் படுத்த முடியாது. மனது அலை பாய்ந்து கொண்டே இருக்கும். இறைவனுக்கும் நமக்கும் இடையே நிறைய இடைவெளி இருப்பது போல தோன்றும். அந்த இடைவெளியை குறைத்து இறைவனடி சேர, இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்த இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும்.

எதிர்மறை ஆற்றலை அழிக்கும் வல்லமை கொண்ட, நஞ்சையும், அமுதமாக மாற்றக்கூடிய, அந்த காலம் முதல் இந்த காலம் வரை தேவர்களாலும் முனிவர்களாலும் ரிஷிகளாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் தர்ப்பைப்புல். இன்றும் ஹோமம் நடக்கக் கூடிய இடத்தில், மந்திரங்கள் ஒலிக்கும் இடத்தில் இந்த தர்ப்பைப் புல்லுக்கு முதலிடம் உண்டு.

- Advertisement -

ஒரு சிறிய ஹோமம் நடத்தினாலும் அந்த இடத்தில் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் தர்ப்பை புல்லை கையில் மோதிரமாக செய்து போட்டு வைத்திருப்பார்கள். தர்ப்பைப் புல் பாய் விரித்து அதன் மீது அமர்ந்து மந்திரத்தை உச்சரிக்க கூடிய வழக்கம் உண்டு. கிரகண காலங்களில் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள் நஞ்சாக மாறக்கூடாது என்பதற்காக அதில் இந்த தர்ப்பைப் புல்லை போட்டு வைக்கும் வழக்கமும் நம்மிடத்தில் உண்டு.

இத்தனை சக்திகளையும் கொண்ட இந்த தர்ப்பைப் புல்லுக்கு மருத்துவ குணங்களும் அதிகம். அதேசமயம் மகத்துவ குணமும் அதிகம். தினமும் உங்களுக்கு மந்திரத்தை சொல்லக்கூடிய பழக்கம் இருந்தால், மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் ஒரு சிறிய துண்டு தர்ப்பை புல்லை வைத்து கொண்டு, மந்திரத்தை ஜெபித்து பாருங்கள். மனம் ஒருநிலைப்படும். மந்திரம் உங்களுக்கு வசியமாகும். மந்திரம் உங்களுக்கு சித்தியாகும். மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கு அபரிவிதமான பலன் கிடைக்கும்.

- Advertisement -

கோவிலுக்கு செல்லும்போது இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை எனும் பட்சத்தில், வீட்டில் இறைவழிபாடு செய்யும் போதும் கோவிலுக்கு செல்லும் போதும் உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு சிறிய துண்டு தர்ப்பை புல்லை வைத்துக்கொள்ளுங்கள். இறைவழிபாட்டில் உங்களுடைய மனம் ஈடுபாட்டுடன் இருக்கும். ஒரு சில நாட்களில், இறைவனுக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் ஏற்படுவதை அனுபவபூர்வமாக உணர்வுபூர்வமாக உணர்வீர்கள்.

உதாரணத்திற்கு இப்போது நம் எல்லாருடைய தேவைகளுக்கும் அத்தியாவசியமாக அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் என்றால் அது பணம். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய பணம் வேண்டும் என்று நீங்கள் பல வழிகளில் முயற்சி செய்து, இறைவனிடம் வேண்டுதல் வைத்து இருப்பீர்கள். ஆனால் உங்கள் கையில் இந்த தர்ப்பைப் புல்லை வைத்துக்கொண்டு கடன் சுமை தீர வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், சொத்து சுகம் சேர வேண்டும், என்று வேண்டுதல் வைத்து பாருங்கள்.

முக்கியமான வேலைகளுக்கு வெளியே செல்லும் போதும், மங்களகரமான காரியங்கள் தடைபடாமல் நடக்க வேண்டுமென்றாலும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு சென்றாலும் சரி, உங்களுடைய கையில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் செல்லக் கூடிய காரியம் நல்லபடியாக நடக்கும். தர்பை புல் கட்டை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வைத்து, மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றித்தான் பாருங்களேன். நன்மை நடந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நன்மை மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -