கஷ்டங்கள் எல்லாம் அடியோடு அழிந்து போக, ஒருமுறை இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள். மீண்டும் இந்த பூமியில் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு ஏற்படும்.

kaliamman-compressed
- Advertisement -

வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாக உள்ளது. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் ஒரு தடை.  நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்ல விஷயங்களை செய்தாலும் எனக்கு நடக்கக்கூடியது கெடுதல் மட்டும் தான். இப்படிப்பட்ட பிரச்சனையிலிருந்து மீளுவதற்கு என்ன செய்வது. கர்ம வினைகளால் வரக்கூடிய பலனை எப்படி கரைப்பது. கஷ்டங்களை அழிப்பதற்கு ஒரு சுலபமான தீப வழிபாட்டு முறையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வாழ்க்கையும் கஷ்டங்கள் கரடுமுரடாக இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக உக்கிர தெய்வங்களால் தான் முடியும்.

உக்கிர தெய்வங்களை பார்த்து கெட்ட சக்தி தான் பயப்பட வேண்டுமே தவிர, நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய எண்ணமும் மனதும் செயல்பாடும் சுத்தமாக இருந்தால், கண்ணை மூடிக் கொண்டு காளியை வழிபாடு செய்யலாம். காளி வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். நிறைய பேருக்கு பயம் இருக்கும். காளியை கும்பிடக் கூடாது என்று சொல்லுவார்களே என்று. அதையெல்லாம் நம்ப வேண்டாம். உண்மையான பக்தியோடு மனதார இந்த ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -

27 மண் அகல் விளக்குகளை புதியதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 27 நட்சத்திரங்களை இது குறிக்கின்றது.. புது மண் அகல் விளக்கை தண்ணீரில் போட்டு ஊற வைத்து கழுவி நன்றாக காய வைத்து வீட்டிலேயே மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது காளியன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு செல்லலாம். அல்லது பிரசித்தி பெற்ற ஏதாவது ஒரு காளி கோவிலுக்கு இந்த பரிகாரத்தை செய்வதற்காகவே செல்லுங்கள். 27 மண் அகல் விளக்கை காளியின் கோவிலில் வைத்து விட்டு சுத்தமான நல்லெண்ணை ஊற்றி, பஞ்சு திரி போட்டு மனதார வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை எல்லாம் அந்த காளிதேவி துவம்சம் செய்ய வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

எந்த மாதத்தில், எந்த கிழமையில், வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீபத்தை காளி கோவிலில் ஏற்றிக்கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். ஒரே ஒருமுறை மேல் சொன்ன முறையில் தீபம் ஏற்றி காளியை தரிசனம் செய்துவிட்டு, உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை அந்த அம்பாள் துவம்சம் செய்து விடுவாள்.  எதிர்மறை ஆற்றல் எதிர்மறை சக்தியை உடனடியாக அழிக்கக்கூடிய தெய்வம்தான் காளி. இந்த வழிபாட்டை செய்து முடித்த பின்பு உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து, நீங்கள் இந்த பூமியில் மறுபிறவி எடுத்ததாக உணருவீர்கள்.

வீட்டிற்கு எந்த மண் பொருட்களை வாங்குவதாக இருந்தாலும், அந்த பொருளை சனிக்கிழமை மட்டும் வாங்க கூடாது. அதேபோல் தான் இந்த பரிகாரத்திற்காக வாங்க கூடிய மண் அகல் விளக்குகளை சனிக்கிழமை அன்று வாங்காதீர்கள். சனிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று பரிகாரத்தை செய்யலாம். ஆனால் அகல் விளக்குகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சுலபமான பரிகாரத்தை செய்து வாழ்வில் பிரகாசமான ஒளியை தேடிக் கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -