பூஜை அறையில் இருக்கும் காமாட்சியம்மன் விளக்கு இப்படி மாறிவிட்டால், நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு கஷ்டம் வரும். ஆபத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் பூஜையறை அறிகுறிகள் என்னென்ன?

vilakku1
- Advertisement -

நமக்கு வரக்கூடிய கெடுதலை முன்கூட்டியே நமக்கு சில அறிகுறிகளாக கடவுள் காண்பித்துக் கொடுப்பான். ஆனால் அதை எல்லாம் நாம் அலட்சியமாக விட்டு விடுவோம். நமக்கு என்ன கெட்டது நடக்கப் போகிறது? என்ற அலட்சியம் மட்டும் யாருக்கும் எப்போதும் இருக்கக் கூடாது. நம் வீட்டு பூஜை அறையில் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் உடனே உஷாராக சுதாரித்துக் கொள்ள வேண்டும். இறைவனால் நமக்கு காண்பித்து தரக்கூடிய அறிகுறிகளில் ஒரு சிலவற்றை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டு பூஜை அறையில் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடந்தால், கொஞ்சம் உஷாராக இருந்து கொள்வது நல்லது. அது என்னென்ன அறிகுறிகள் என்பதை நாமும் தெரிந்து வைத்துக் கொள்வோமா.

நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைக்கக்கூடிய காமாட்சியம்மன் விளக்கு அடுத்த நாளே கலை இழந்து காணப்படும். திரி தானாக எரிந்து விளக்குக்கு மேலே அம்மனுடைய திருஉருவம் எல்லாம் கருப்பாக மாறிவிடும். (ஏதோ ஒரு நாள் மறந்து இப்படி திரி எறிவது எதிர்பாராது நடந்த சம்பவம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அடிக்கடி இந்த சம்பவம் ஒரு வீட்டில் நடக்கக் கூடாது.)

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கு தினம் தினம் எண்ணெய் ஊற்றி வைக்கக்கூடிய இடத்தை துணியை வைத்து சுத்தம் செய்து புது எண்ணெய் ஊற்றினாலும், அந்த எண்ணெய் உடனடியாக பச்சை நிறத்தில் பாசி பிடித்தது போல மாறிவிடும். இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

அடுத்தபடியாக பூஜை அறையில் மாட்டி வைத்திருக்கும் தெய்வங்களின் திருவுருவப்படத்தில் இருக்கும் முகம் மிகவும் பிரகாசமாக அழகாக தெய்வங்களை நேரில் காண்பது போலவே இருக்கும். ஆனால் ஒரு சில சமயத்தில் நமக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், பூஜை அறை கலை இழந்து காணப்படும். பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களின் முகமே வாட்டமானது போல நமக்கு தோன்றும். இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தாலும் உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.

- Advertisement -

சில பேர் வீடுகளில் ஆசை ஆசையாக நாய் வளர்ப்பார்கள். கோழி வளர்ப்பார்கள், பறவைகளை வளர்ப்பார்கள். இப்படிப்பட்ட உயிரினங்கள் நிலை வாசலில் வந்து தங்களுடைய உயிரை விட்டுவிடும். நிலை வாசலுக்கு நேராக நாம் ஆசையாக வளர்த்த வாயில்லா ஜீவன்கள் உயிர் விட்டாலும் உங்களுடைய குடும்பத்திற்கு ஏதோ ஒரு கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். கனவில் நாய் துரத்தி வந்து உங்களை கடிப்பது போல இருந்தால், நிச்சயமாக உங்களுடைய ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு போய் காண்பித்து பரிகாரம் செய்து கொள்ளுங்கள். அது கெட்ட சகுனத்தை குறிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சில பேர் வீடுகளில் பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை புனஸ்காரங்கள் செய்யவே முடியாது. ஏதோ ஒரு காரணத்தால் ஏதோ ஒரு தடை வந்து தடுத்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலும் உங்களுடைய குடும்பம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறது என்று தான் அர்த்தம்.

- Advertisement -

வீட்டில் எதிர்பாராத கண் திருஷ்டி விழுந்ததன் மூலமாகவும், செய்வினை, கெட்ட சக்தி, ஏவல், பில்லி, சூனியம், மாந்திரீகம் தாந்த்ரீகம் போன்ற பிரச்சனைகள் ஏதாவது உங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்கப் போகிறது என்ற சூழ்நிலை வந்தாலும் மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் வீட்டில் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பிரச்சனையை தெரிந்து கொள்ள, அதை சரி செய்ய நீங்கள் நம்பகமான ஜோதிடர்கள், நம்பகமான மாந்திரீகர்கள், தாந்திரீகம் செய்பவர்களை தான் நாட வேண்டும். குறிப்பாக இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்கள் குடும்பத்திற்கு வந்துவிட்டால், உங்கள் ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பியுங்கள். தசா புத்தி சரியாக இருந்தால் எந்த ஒரு ஏவல் பில்லி சூனியமும் உங்களை எதுவும் செய்யாது.

தசா புத்தி சரியாக இல்லை, கூடவே மேல் சொன்ன அபசகுணங்கள் உங்கள் வீட்டில் நடக்கிறது என்றால், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பதிவை படித்த பின்பு எல்லோருக்கும் மனதளவில் பயம் வர வேண்டாம். எல்லோருக்கும் கெட்டது நடந்து விடும் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் தீராத கஷ்டங்கள் குழப்பங்கள் வரும் சமயத்தில், மேல் சொன்ன அறிகுறிகள் உங்கள் வீட்டில் நடக்கும் போது, நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால் உங்களுடைய குடும்பத்திற்கு பெரிய கஷ்டங்களை வராமல் தவிர்த்து விட முடியும் என்பதற்காக தான் இந்த பதிவு.

- Advertisement -