காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் தீராத கடனுக்கும் கூடிய விரைவிலேயே தீர்வு கிடைக்கும்.

kamatchi-amman-vilakku
- Advertisement -

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம். பணக்காரர்களுக்கு பணம் குட்டி போடுகின்றது. ஏழைகளுக்கு வட்டி குட்டிப் போடுகின்றது. கடன் வாங்கிய பின்பு கடனுக்கு வட்டி கட்டியே பாதி வாழ்க்கை முடிந்துவிடும். பிறகு அசல் தொகையை எங்கிருந்து செலுத்துவது. அசல் தொகைக்கு நிகராக வட்டி கட்டியும், கடனை அடைக்க முடியாமல் தவித்து வருபவர்களுக்கு ஆன்மீக ரீதியான சக்திவாய்ந்த வழிபாடு பரிகார முறை உங்களுக்காக. தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய வேண்டுதல் உடனே பலிக்கும். குறிப்பாக கடன் சுமை உள்ளவர்கள் கடன் தீர வேண்டும் என்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

vilakku

இந்த பரிகாரத்திற்க்கு நமக்குத் தேவையானது காமாட்சி அம்மன் விளக்கு. காமாட்சி அம்மன் அமர்ந்திருப்பது படி, இரண்டு பக்கமும் கரும்பு இருக்கும் விளக்கத்தான் காமாட்சி அம்மன் விளக்கு. தவிர கஜலட்சுமி விளக்கு, அஷ்ட லட்சுமி விளக்கு உங்கள் வீட்டில் இருந்தால் இந்த பரிகாரத்தை செய்வதற்காக புதியதாக பித்தளையில் காமாட்சி அம்மன் விளக்கை ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, பூஜை அறையில் அரிசி மாவில் சிறியதாக கோலம் ஒன்று போட்டுக் கொள்ள வேண்டும். இந்த கோலத்தின் மேலே ஒரு சிறிய தட்டை வைத்து அந்தத் தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

Vilakku

இந்த விலக்கிற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று குல தெய்வத்தையும் காமாட்சி அம்மனையும் மனதார 10 நிமிடங்கள் வேண்டிக்கொள்ளுங்கள். அதன் பின்பு விளக்கை நமஸ்காரம் செய்து, ஊதுவத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

தீபச்சுடரை உள்வாங்கி தீபச்சுடரிடம் உங்களுடைய வேண்டுதலை முழு நம்பிக்கையோடு வைக்க வேண்டும். இன்னும் மேலே சொல்லப் போனால் தவம் இருக்க வேண்டும். ‘உலக நன்மைக்காக நெருப்பின் மேல் தவமிருந்த காமாட்சி அம்மனை, நம்பி நீங்களும் தவமிருந்து வழிபாடு செய்தால் நீங்கள் வேண்டிய வரம் கிடைப்பது உறுதி’. இந்த பூஜையை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது காலை 6 மணிக்கு முன்பு உங்களுடைய வீட்டில் நிறைவு செய்திருக்க வேண்டும்.

kamatchi-amman8

கடன் பிரச்சனை என்று மட்டுமல்ல, எதை நினைத்து உங்களுடைய வீட்டில் நீங்கள் இந்த பூஜையை தொடங்கினீர்களோ, அந்த வேண்டுதல் 48 நாட்களுக்குள் நிச்சயமாக நிறைவேறி இருக்கும். முழு நம்பிக்கையோடு இந்தப் பூஜையை உங்களுடைய வீட்டில் தொடங்கவேண்டும். நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் முழுமூச்சோடு நீங்கள் ஈடுபட வேண்டும்.

kamatchi-amman4

விடாமுயற்சியும் இந்த ஆன்மீக ரீதியான பூஜையும் ஒன்று சேரும் போது உங்களுடைய பலம் அதிகரிக்கும். நீங்கள் நினைத்தது நிச்சயம் பலிக்கும். குறிப்பாக கடனை அடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் சரி, பல வருடங்களாக வட்டி கட்ட முடியாமல் திணறி வருபவர்கள் இந்த பூஜையை செய்தால் கூடிய சீக்கிரத்திலேயே அவர்களுக்கு அந்த கடன் பிரச்சினைக்கு ஒரு விடிவு காலம் வரும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -