இந்த 1 பொருள் வீட்டில் இருந்தால் போதும். உங்களை சுற்றி இருக்கும் கண் கண்திருஷ்டி விலகும். உங்கள் கையில் பணம் சரளமாகப் புரளும்.

kanthrushti
- Advertisement -

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லையே, இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருப்பதுண்டு. அதேபோல் எவ்வளவு தான் மற்றவர்களிடம் அன்பாக, நேர்மையாக இருந்தாலும் அதற்கான எவ்வித நற்பெயரும் பலனும் கிடைப்பதில்லை. அதைத் தவிர்த்து தொடர்ந்து மேன்மேலும் பல பிரச்சனைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும். மன நிம்மதி இருக்காது. இவ்வாறு காரணமே இல்லாமல் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு உங்களை சுற்றியுள்ள கண்திருஷ்டியை காரணமாக அமையும். இந்த கண்திருஷ்டியை உங்களை விட்டு அகற்றுவதற்கு வீட்டில் இந்த ஒரு பொருளை எப்பொழுதும் வைத்திருந்தால் போதும். அது என்ன பொருள்? அதற்கான பலன்கள் என்னென்ன? என்பதைப் பற்றியே இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thirusti

எவருக்கும் எந்தவித தீமை செய்யாமல் இருந்தாலும், உங்களை சுற்றியுள்ளவர்கள் ‘இவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களே, இவர்களுக்கு இவ்வளவு அழகான பிள்ளைகள் இருக்கிறார்களே, இந்த வீடு மிகவும் அழகாக இருக்கிறதே’ என்று உங்கள் மீது விழும் அவர்களது கண் பார்வையாலே கண்திருஷ்டி உண்டாகும். இவ்வாறான கண்திருஷ்டிகளால் நீங்கள் சம்பாதித்த பணம் கரைந்து கொண்டு செல்லுமே தவிர கையில் தங்குவதற்கு வழியொன்றும் இருக்காது. ஆனால் மருத்துவத்தில் மிகவும் பயன் அளிக்கூடிய வெட்டிவேருக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக உள்ளது. இந்த வெட்டிவேரை வைத்து எளிய பரிகாரங்கள் மேற்கொள்வதன் மூலம் வீட்டில் உள்ள கண் திருஷ்டியை அகற்றி தாராளமான பண புழக்கத்தை வரவழைக்க முடியும்.

- Advertisement -

வெட்டிவேர் பரிகாரம்:
சிறிதளவு வெட்டிவேர் மற்றும் சிறிதளவு வேப்பங்கொழுந்து இவை இரண்டையும் பூஜை அறையில் வைத்து உங்கள் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக்கொண்டு அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக செய்துகொள்ள வேண்டும். இந்த பொடியை விபூதியுடன் கலந்து நீங்கள் தினமும் வெளியில் செல்லும் பொழுது நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் செல்லும் எந்த காரியமாக இருந்தாலும் அது சிறப்புடன் நடைபெறும். உங்கள் மீது விழும் கண் திருஷ்டிகள் அனைத்தும் தூள் தூளாகி விடும்.

veppailai

இந்த வெட்டிவேர் பொடியை சிறிதளவு தண்ணீருடன் கலந்து வீட்டின் மூலைகளில் தெளித்து வர வேண்டும். இவ்வாறு செய்வதனால் அதிலிருந்து வரும் நேர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழித்து நல்ல சூழலை நிலவச் செய்யும். வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் வருவது, உடல்நலக் குறைவு ஏற்படுவது போன்றவற்றை தவிர்க்கும். இதனைத் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல மாற்றம் உண்டாகும்.

- Advertisement -

அதேபோல் இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து நீங்கள் வேலை செய்யும் இடமாக இருந்தால் உங்களைச் சுற்றியும், நீங்கள் தொழில் செய்யும் இடமாக இருந்தால் அந்த இடத்தின் மூலைகளிலும் தெளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களை சுற்றியுள்ள கண் திருஷ்டி அகன்று உங்கள் தொழிலில் லாபம் இரட்டிப்பாகி கையில் தாராளமாக பணம் புரள ஆரம்பிக்கும். உங்கள் தொழில் எதிரிகளும் உங்களை விட்டு விலகி உங்கள் வழியில் குறுக்கே வராமல் இருப்பார்கள்.

viboothi

வெட்டி வேரின் பயன்கள் பல இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி இந்த ஒரு பொருளுக்கு மகத்துவம் வாய்ந்த சக்திகள் பல இருக்கின்றன. எனவே வெட்டிவேரை வைத்து செய்யும் இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து பின்பற்றி வாழ்வில் வளம் பெற வாழ்த்துகின்றோம்.

- Advertisement -