கண் கருவளையங்களால் உங்கள் முகம் களை இழந்து விட்டதா? கவலையை விடுங்கள் ஒரே வாரத்தில் கருவளையம் காணாமல் போக இதோ சூப்பர் டிப்ஸ்

face-massage-karuvalaiyam
- Advertisement -

நாம் முகத்தை என்ன தான் அழகாக பராமரித்து வந்தாலும் கூட, முகத்தின் அழகை எடுத்துக் காட்டுவதே இந்த கண்கள் தான். கண்கள் சோர்ந்து போய் அதை சுற்றி கருவளையம் படிந்து விட்டால் நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் முகம் பொலிவாக இருக்காது.இந்த கருவளையங்கள் வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் அதை சரி செய்யவும் முடியாது. இப்போது இந்த பதிவில் கண் கருவளையத்தை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

கண் கருவளையம் தோன்றுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமான காரணம் அதிக மன அழுத்தமும், சரியான முறையில் தூக்கம் இல்லாததும் தான். ஒரு மனிதனுக்கு சராசரி ஆன தூக்கமும், ஓய்வும் இல்லை என்றால், இது மட்டுமின்றி உடலில் பல்வேறு பிரச்சனைகள் வந்து விடும். கருவளையம் வராமல் தடுக்க இந்த முறைகளை சரியாக செய்து வாருங்கள். எதையுமே வரும்முன் காப்பது தான் சிறந்தது.

- Advertisement -

கண் கருவளையம் நீக்க நமக்கு தேவையான பொருட்கள் வாழைப்பழம், டூத் பேஸ்ட், தயிர், பேக்கிங் சோடா. ஒரு பவுலில் நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒரு கால் பங்கு எடுத்து மசித்துக் கொள்ளுங்கள். இதை நல்ல பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை மசித்து அதன் பிறகு இதில் சமையல் சோடா ஒரே ஒரு பின்ச் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் கோல்கேட் பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் முதலில் ஃபைன் பேஸ்ட்டாக கலந்து கொள்ளுங்கள், அதன் பிறகு ஒரு டீஸ்பூன் நல்ல புளித்த தயிர் (கடைகளில் வாங்காமல் வீட்டில் பண்ண தயிராக இருந்தால் நல்லது) இந்த தயிரை பேஸ்டுடன் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேக் போடுவதற்கு முன் உங்கள் கண்களைச் சுற்றிலும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு கண்களை சுற்றி இந்த பேஸ்டை பேக் போல போட்டு விடுங்கள். ஐந்து நிமிடம் வரை உங்கள் கண் கருவளையத்தை சுற்றி இது அப்படியே இருக்கட்டும் அதன் பிறகு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை அலம்பி விடுங்கள்.

- Advertisement -

இந்த பேக் போடும் போது மிகவும் முக்கியமானது கண்களின் படாமல் போட வேண்டும். இதில் சேர்க்கும் பேக்கிங் சோடா பேஸ்ட் போன்றவை கண்களில் பட்டு விட்டால் கண்களில் எரிச்சல் இருக்கும். இந்த பேக்கை போடும் போது கவனமாக கண்களில் படாதவாறு போட்டுக் கொள்ளுங்கள்.

இதைத் தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வந்தாலே போதும் உங்கள் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் காணாமல் போய் விடும். இது மிகவும் பலன் தரக்கூடிய குறிப்பு கண் கருவளையம் வந்தவர்கள் இந்த முறையை முயற்சித்துப் பாருங்கள்.

- Advertisement -