சுமக்கவே முடியாத அளவுக்கு கடன் சுமை இருந்தாலும், அந்த சுமையை இறக்கி வைக்க 27 மொச்சைக் கொட்டைகள் இருந்தால் போதும்.

mochai
- Advertisement -

சுமக்க முடியாத கடன் பாரம் என்று மட்டும் கிடையாது. உங்களுடைய மனதில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, அதை சரி செய்ய இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கும் சுமை படிப்படியாக 11 வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். பணக்கஷ்டம் தீர, கடன் சுமை குறைய, தீராத குழப்பத்திற்கு முடிவு தெரிய, திருமணம் சீக்கிரம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற, நோய் நொடி இல்லாமல் வாழ, குழந்தைகள் திறமையாக செயல்பட இப்படி எதை வேண்டிக்கொண்டாலும் அது சீக்கிரம் நடக்கும்.

சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மொச்சை கொட்டைகள் தேவை. இந்த மொச்சைக் கொட்டையை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலை வீட்டில் இருக்கும் பெண்கள் அவர்களுடைய கையால் இந்த பரிகாரத்தை செய்யலாம். எப்போதும் போல பரிகாரம் செய்வதற்கு முன்பு எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையை அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பிரபஞ்சத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பாக ஒரு நல்ல ஆற்றல் நிறைந்து இருக்கத்தான் செய்யும். அந்த நேரத்தில் நாம் என்ன வேண்டுதல் வேண்டிக் கொண்டாலும் அது கூடிய சீக்கிரத்தில் பலிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. முடிந்தால் காலை 6:00 மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள்.

பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு, உங்களுடைய வலது உள்ளங் கைகளில் 27 மொச்சை கொட்டைகளையும், சிறிதளவு நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு குல தெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக்கொண்டு, கஷ்டங்கள் தீர பிரார்த்தனை செய்து ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி! என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு கையில் இருக்கக்கூடிய அந்த இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

மொச்சைக்கொட்டை நன்றாக ஊறட்டும். கூடவே அந்த நாட்டுச் சர்க்கரையும் இருக்கட்டும். இந்த பொருளை அப்படியே தண்ணீரோடு கொண்டு போய் ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு கொடுத்துவிடலாம். அப்படி இல்லை என்றால் தண்ணீரை வடித்துவிட்டு காக்கை குருவிகளுக்கு இந்த தானியத்தை இறையாக போட்டுவிடலாம்.

எதுவுமே இல்லையென்றால் கால் படாத இடத்தில் போடுங்கள். எறும்பு வந்து இதை சாப்பிட்டுக் கொள்ளும். இந்த பரிகாரத்தை 11 வாரங்கள் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய சுமக்க முடியாத கஷ்டத்திற்கு கூட ஒரு தீர்வை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும் என்ற  என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -