கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா? கணவன் உங்கள் பேச்சை தட்டாமல் கேட்க இந்த ஒரு படத்தை வீட்டில் மாட்டி வைத்தால் போதுமே!

fight-meenatchi
- Advertisement -

குடும்பத்தில் எப்போதும் கணவன்-மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாள் நன்றாக இருந்தால் 2 நாள் சண்டை வருகிறது என்று புலம்புபவர்களும் உண்டு. இப்படி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை போடும் இல்லத்தில் இந்த ஒரு படத்தை, இந்த ஒரு திசையில் மாட்டி வைத்தால் கண்டிப்பாக பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அதை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கணவன்-மனைவிக்குள் பாதி பிரச்சனை வருவது மற்றவர்களால் தான் இருக்கும். கணவனின் குடும்பத்தை பற்றி, மனைவி தவறாக புரிந்து கொண்டு பேசுவதும், மனைவியின் குடும்பத்தை பற்றி, கணவன் தவறாக புரிந்து கொண்டு பேசுவதும் அவர்களுக்குள் பிரச்சனை வருவதற்கு பாதி காரணமாக இருந்திருக்கும். திருமணமான பின்பு இரு வீட்டாரையும் தன் வீட்டாராக நினைப்பவர்கள் தான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும்.

- Advertisement -

எனக்கு என் குடும்பத்தார் தான் முக்கியம், உங்கள் குடும்பத்தாரை பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொல்லும் பொழுது அதே பதிலை அவர்களும் கூறினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படி நீங்கள் ஒரு விஷயத்தை பேசும் பொழுது அதே உங்களுக்கு திருப்பி கிடைத்தால் எப்படி இருக்கும்? என்று யோசிக்கத் தொடங்கி விட்டாலே, பாதி பிரச்சனைகளுக்கு முடிவு கிடைத்துவிடும். இது இருவருக்கும் பொருந்தும்.

இங்கு பெரும்பாலான குடும்பத்தில் பெண் தான் ஆட்சியாளராக இருக்கிறார். ஒரு சில வீடுகளில் தான் ஆண் ஆட்சி செலுத்துகிறார். ஆணை விட பெண் ஆட்சி செலுத்தும் வீடுகளில் கட்டுப்பாடும், ஒழுக்கமும் அதிகம் இருக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. முந்தைய காலங்களில் கிராமப்புறங்களில் வழக்குச் சொல்லாக உங்கள் வீட்டில் மீனாட்சி ஆட்சியா? சிதம்பரம் ஆட்சியா? என்று கேட்பார்கள். மதுரையில் அரசாலும் மீனாட்சியை குடும்பத்தில் பெண்களாகவும், சிதம்பர மூர்த்தியை ஆண்களாகவும் பாவித்து அவ்வாறு கூறப்படுவது உண்டு.

- Advertisement -

பச்சையாக இருக்கும் மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனின் திருவுருவ சிலை முழுவதும் சுயம்புவாக மரகதக் கல்லால் ஆனது. அவருடைய வலது கால் சற்று முன்னோக்கி இருக்கும், இதனால் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவதாக ஐதீகம் உண்டு. சிவாலயங்களுக்கு சென்றால் முக்தி கிடைக்க வழி தான் உண்டாகும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த அம்மனை மதுரை சென்று தரிசித்தாலே முக்தி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை உண்டு. மீனாட்சி அம்மன் படத்தை சிறிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அம்மன் வலது கையில் இருக்கும் கிளி அம்மனிடம் காதில் ஏதோ கிசுகிசுப்பது போல காட்சி தரும்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்று கூறக் கேட்டிருப்போம். பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்களை அம்மன் மறந்தாலும், இந்த கிளி திரும்பத் திரும்ப அதனை அம்மனுக்கு நினைவுப் படுத்தும். இத்தகைய சக்தி வாய்ந்த இந்த மீனாட்சி அம்மன் படத்தை வீட்டின் வட கிழக்கு மூலையில் மாட்டி வையுங்கள். வட கிழக்கில் பொதுவாக சமையல் அறை அல்லது பூஜை அறை அமைக்கப்பட்டு இருக்கும். உங்கள் வீட்டின் எந்த வடகிழக்கு மூலையில் அமைத்தால் சரியாக இருக்கும் என்பதை கவனித்து அங்கு இந்த படத்தை மாட்டி வைத்து பாருங்கள், நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து கணவர் உங்கள் பேச்சைக் கேட்க துவங்குவார். மதுரையில் தாழம்பூ குங்குமம் கொடுப்பார்கள். அதை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டாலும் பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -