பாக்கியம் தரும் திருநங்கைகள். இதை தெரிந்துகொண்டால் இனி இவர்களைக் கண்டு யாரும் ஒதுங்கிப் போக மாட்டீர்கள்

kadavul
- Advertisement -

நமது சமூகம் அறிவியல் சம்பந்தமான முன்னேற்றங்கள் பல அடைந்தாலும் மனதளவில் பலரும் பழைய பஞ்சாங்கங்களையும், சில தேவையற்ற மூடநம்பிக்கைகளையும் பின்பற்றி தான் வருகின்றனர். நமது சமூகத்தில் இன்று திருநங்கைகளாக உள்ளவர்கள் ஆண்-பெண் இவர்களுக்கு இணையாக பல சாதனைகளை செய்து வருகின்றனர். அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே, சொல்லப்போனால் ஆண் பெண் இவர்களை விட திருநங்கைகளானா இவர்களிடம் அதீத சக்திகள் இருக்கின்றன. சாதாரணமாக ஆண் பெண் செய்ய முடியாத அனைத்து வேலைகளையும் இவர்கள் ஒருவராகவே செய்து முடிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் இன்றளவும் இவர்களை பார்த்தவுடன் சற்று ஒதுங்கி ஓரமாக செல்கின்றனர். எனவே இந்தப் பதிவில் இவர்களைப் பற்றிய ஒரு அற்புதத் தகவலை பற்றிதான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தத் தகவலை படித்த பின்பு இனி அனைவரும் திருநங்கைகளை மனதார வாழ்த்த ஆரம்பிப்பார்கள்.

jyotirlingam

நமது புராணங்களை ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அர்த்தநாரீஸ்வரர் உருவம் பால் இரண்டு சக்திகள் கலந்த அனைத்து தெய்வங்களும் மிகுந்த பலம் வாய்ந்தவர்களாக இருந்துள்ளனர். அவ்வாறு யானைத் தலையும் மனித உடலும் இருக்கும் விநாயகர், மனித உடலும் குரங்கின் முகமாக இருக்கும் ஆஞ்சநேயர், மனித உடலும் பன்றியின் முகமுமாக இருக்கும் வராஹி, மனித உடலும் சிங்கத்தின் முகமாக காட்சி கொடுத்த நரசிம்மர் இவர்கள் அனைவரும் அதீத பலம் பொருந்தியவர்களாவர்.

- Advertisement -

இவர்களின் அவதாரத்தில் காண வரலாற்றை புரட்டிப் பார்த்தோம் என்றால் யாராலும் அடக்க முடியாத, அழிக்கமுடியாத, செய்ய முடியாத காரியங்களுக்காக இந்த சக்தி வாய்ந்த அவதாரத்தை எடுத்திருப்பார்கள். எனவே இவர்களின் மறு உருவமாக இருக்கும் திருநங்கைகளும் மிகுந்த சக்தி படைத்தவர்களாவார்கள். இவர்களிடம் இறைவனுக்கான மறு முகத்தை பார்க்க முடியும்.

sivan

கிரகங்களின் படி சனி புதன், புதன் கேது, கேது சனி இவ்வாறு இந்த இரண்டு கிரகங்கள் சேர்ந்துள்ள இந்த அமைப்பிற்கு மிகவும் சம்பந்தப்பட்டவர்கள் திருநங்கைகள். ஜாதகத்தில் இவ்வாறு இரண்டு ராசிகள் சேர்ந்து அமைந்திருந்தால் அவர்கள் யோககாரர்களாக இருப்பார்கள். இப்படி அமைவது என்பது சாதாரணமாக ஒருவருக்கு நிகழ்வதில்லை. ஆனால் திருநங்கைகளுக்கு பெரும்பாலும் அவர்களது ஜாதகத்தில் இவ்வாறு இரு கிரகங்கள் சேர்ந்து அமைந்துள்ளன.

- Advertisement -

புதன் என்பது கல்விக்கு அதிபதியாவார். செல்வம் பெருகவும், கலைகளில் சிறந்து விளங்கவும், நாம் மறைந்த பின்னரும் நமது பெயர் இந்த மண்ணில் நிலவியிருக்க எண்ணிலடங்கா புகழ் சேர்ப்பதும் இந்த புதன் கிரகம் தான். கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்ப்பதும், திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதும் நமது ஜாதகத்தில் கேது வலுவாக இருந்தால் மட்டுமே. பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நமது வாழ்க்கைக்கு நல்ல பலன் மற்றும் கெடு பலன் கொடுப்பவர் சனி பகவான் ஆவார். உங்களின் ஆயுட்காலம் நீட்டிப்பவரும் சனி பகவானாவார். இவ்வாறு வலிமை பொருந்திய இந்த மூன்று கிரகங்களின் அமைப்பும் உள்ளவர்கள் திருநங்கைகள்.

Varahi amman

உங்கள் வாழ்க்கையில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் அவை உங்களை விட்டு விலக திருநங்கைகளின் ஆசீர்வாதம் கிடைத்தால் போதும். அதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை ஐந்து திருநங்கைகளை உங்கள் வீட்டிற்கு அழைத்து, அவர்கள் மகிழ்ச்சி கொள்ளும் அளவில் வாய்க்கு சுவையாக உணவளித்து, நல்ல ஆடை எடுத்துக் கொடுத்து, அவர்களுக்கு உங்களால் முடிந்தவரை சிறிய அளவு பணத்தை வைத்து தாம்பூலம் கொடுத்து, அவர்களிடம் ஆசி பெற வேண்டும். இதனை மட்டும் செய்து பாருங்கள். திருநங்கைகளிடம் இருக்கும் அற்புத சக்தியை உணர்ந்து கொள்வீர்கள்.

- Advertisement -