கண் திருஷ்டியை கருக வைக்கும் கருப்பு நிற பரிகாரம்! இந்த 3 கருப்பு பொருட்களை ஒன்றாக பார்த்தால், கண் திருஷ்டியே கலங்கி கருகிப் போய்விடும்.

milage
- Advertisement -

பொதுவாகவே கண் திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்றால் கருப்பு நிற மையில் தான் பொட்டு வைப்பார்கள். இது நம்மில் இருந்து வரும் பழக்கம். இப்படி கருப்பு நிறத்திற்கு கண்திருஷ்டியை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். அந்த வரிசையில் நம் வீட்டில் இருக்கும் கருப்பு நிற பொருட்களை வைத்து நமக்கு, இருக்கக்கூடிய கண்திருஷ்டியை எப்படி பஸ்பம் ஆக்குவது என்ற ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

milagu

ஒரு சதுர வடிவில் இருக்கும் வெள்ளை நிற துணியை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மிளகு 1 ஸ்பூன், கருப்பு எள் 1 ஸ்பூன், கருஞ் சீரகம் 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் வைத்து சிறிய முடிச்சு போல கட்டி உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வேலைக்கு செல்லும்போது அல்லது விசேஷங்களுக்கு செல்லும் போது வெளியே எந்த இடத்திற்கு சென்றாலும் இந்த முடிச்சை தெரியாமல் பர்ஸ் உள்ளேயோ அல்லது உங்கள் ஹேன்ட் பேகிற்கு உள்ளேயும் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இது அப்படியே இருக்கட்டும். வாரத்திற்கு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை உங்கள் இஷ்டம் தான். ஏழு நாட்களுக்கு ஒருமுறை இந்த முடிச்சை எடுத்து உங்களுடைய தலையை வலது பக்கமாக மூன்று முறை, இடது பக்கமாக மூன்று முறை சுற்றி ஒரு மண் அகல் விளக்கில் வைத்து அதில் ஒரு கற்பூரம் போட்டு எரித்து விடுங்கள். நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் வைத்து எரித்து விடவேண்டும்.

neruppu

இரவு ஒன்பது மணிக்கு மேல் இப்படி இந்த முடிச்சினை எரித்து விட்டால் உங்கள் உடம்பில் உள்ள அத்தனை கண் திருஷ்டியும் இந்த முடிச்சோடு எரிந்துவிடும். உங்கள் மேல் பட்ட கண் திருஷ்டி பொறாமை எண்ணம் பிடித்தவர்களின் வயிற்றெரிச்சல் அனைத்தும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. உங்களுடைய முன்னேற்றம் தடைபடாது.

- Advertisement -

இதேபோல் வீட்டில் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தால், உடம்பில் அடித்துப்போட்டது போல வலி இருந்தால், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேலே சொன்னது போல உங்களது தலையை சுற்றி எரிகின்ற நெருப்பில் போட்டு விட வேண்டும்.

karpuram

ஒரு கட்டி கற்பூரத்தை மண் அகல் விளக்கில் வைத்து ஏற்றி அந்த நெருப்பில், இந்த மூன்று பொருட்களைப் போட்டு பொசுக்கி விட்டால் கூட போதும். உங்களை பிடித்த கண் திருஷ்டியும் வயிற்றெரிச்சலும் உங்களை விட்டு நீங்கிவிடும். உடனடியாக உடல் நிலையில் மாற்றம் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பலன் பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -