வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது இந்த 1 பொருளை மட்டும் தாண்டி காலடி எடுத்து வைத்து செல்லுங்கள் போதும். நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி.

vasal
- Advertisement -

ஏதாவது ஒரு முக்கியமான காரியம் சக்ஸஸ் ஆக வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறோம். அந்த காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க நேர்காணலுக்கு செல்கிறீர்கள். திருமணம் நடக்க வாழ்க்கை துணையை பார்ப்பதற்காக செல்கிறீர்கள். அல்லது வீடு வாங்க நிலம் வாங்க அல்லது வேறு ஏதோ தங்க நகை வாங்க இப்படி நல்ல காரியத்திற்கு செல்லப் போகிறீர்கள். அந்த நல்ல காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் உங்களுக்கு சாதகமாக நடக்க வேண்டுமா. கண்ணை மூடிகிட்டு இந்த 1 பொருளை தாண்டி செல்லுங்கள் போதும். அது எந்த பொருள். இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக.

வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம். இப்படி சாமி கும்பிட செல்லும் போது உங்களுடைய உள்ளங்கைகளில் 3 மிளகை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுதலை இறைவனிடம் வைத்துவிடுங்கள். கையில் மிளகு அப்படியே இருக்கட்டும். வீட்டிற்கு வெளியே செல்வதற்காக நிலை வாசல்படியை தாண்டி விடுங்கள். நிலைவாசல் வெளி பக்கத்தில் இந்த மூன்று மிளகை தரையில் வைத்து காலால் தாண்டி செல்ல வேண்டும். உங்களுடைய வலது காலை தூக்கி மிளகுக்கு அந்தப்பக்கம் வைத்து நீங்கள் கடந்து செல்ல வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

நிலை வாசலில் இருக்கும் மிளகை உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியோ அம்மாவோ கை படாமல் எடுத்து தூர தூக்கி போட்டுவிடலாம். எக்காரணத்தைக் கொண்டும் தாண்டிய மிளகை உங்களுடைய கையில் தொட்டு எடுக்க வேண்டாம். ஒரு பேப்பரில் ஒரு துணியை எடுத்து தூக்கி தூரப் போட்டு விடுங்கள்.

ஒருவேளை வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் வெளியே கிளம்புவதாக இருந்தால், மிளகு நிலை வாசலில் அப்படியே இருக்கட்டும். நீங்கள் வீட்டிற்கு திரும்பும் போது யாராவது ஒருத்தர் அந்த மிளகை பேப்பரில் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அதன் பின்பு வீட்டிற்கு வரலாம்.

- Advertisement -

நிலை வாசலில் இருந்து வெளியே சென்ற உடன் சில நல்ல விஷயங்களும் நம்முடன் வரும் சில கெட்ட விஷயங்களும் நம்முடன் வரும். ஆனால் இப்படி மிளகை நாம் தாண்டி விட்டு செல்லும் போது நம் உடம்பிலும், நம்மை சுற்றி இருக்கும் கெட்ட விஷயங்களை அந்த மிளகு ஈர்த்துக் கொள்ளும். விஷத்தை முறிக்கும் தன்மை இந்த மிளகுக்கு உண்டு அல்லவா இதன் அடிப்படையில்தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது மட்டும் செய்து கொண்டால் போதும். செல்லும் காரியம் நிச்சயமாக சக்சஸ் ஆகும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -