கர்மாவை கட்டி போடும் கரு மிளகு! இந்த நாளில் கரு மிளகை தலையை சுற்றி போட்டால் கர்ம வினைகள் கரைந்து ஓடிவிடும்.

milagu
- Advertisement -

எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று சொல்லுவார்கள். நாம் எதை விதைக்கின்றோமோ அதுதான் முளைக்கும் என்றும் சொல்லுவார்கள். நேற்று வரை, போன நிமிடம் வரை, நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது. இந்த நிமிடத்தில் இருந்து அடுத்தவர்களுக்கு நல்லதை மட்டுமே நினையுங்கள். உங்களுக்கு கெடுதல் செய்து, உங்களை விரோதியாக பார்த்து, உங்களுக்கு துரோகியாக மாறிய நபர்களுக்கு கூட ஒரு நொடிப்பொழுதும் தீங்கு நினைக்காதீர்கள். எதிராளிகள் கூட கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாதீர்கள்.

காசு பணம் இருக்கிறதோ இல்லையோ நேர்மையாக நல்லவர்களாக மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்து வாழ தொடங்குங்கள். உங்களுக்கு கர்ம வினையால் வரக்கூடிய பாதிப்புகள் 80 சதவிகிதம் குறைந்துவிடும். மீதி 20 சதவிகிதம் வேறு வழி கிடையாது. கர்ம வினையால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை நாம் எதிர்கொண்டு ஜெயித்து தான் ஆக வேண்டும். கர்ம வினைக்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். சரி, இந்த கர்ம வினையிலிருந்து தப்பிக்க, வரக்கூடிய கஷ்டத்திலிருந்து கொஞ்சமாவது விடுதலை பெற, மன நிம்மதியை அடைய ஆன்மீகத்தில் ஏதாவது பரிகாரம் சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு.

- Advertisement -

கர்ம வினையை நீக்கும் மிளகு பரிகாரம்:
சமையலுக்கு பயன்படுத்தும் மிளகை தான் இந்த பரிகாரத்திற்கும் நாம் பயன்படுத்த போகின்றோம். புதுசாக, பரிகாரத்திற்காக, மிளகை கடையிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் இந்த மிளகை வைத்து விடுங்கள். காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தின் போது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து நீங்கள் தயாராகி, 6 மணிக்கு சூரியன் உதயமாகும் போது இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள்.

வெட்டவெளியில் கிழக்கு பார்த்தவாறு அமர வாய்ப்பு இருந்தால் வெட்டவெளியில் அமர்ந்து கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் ஜன்னல் பக்கத்தில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு சூரியனை நினைத்து ஒரு கைப்பிடி அளவு கருமிளகை உள்ளங்கையில் வைத்து நீங்கள் செய்த கெட்ட கர்மாக்கள் அனைத்தும் உங்களை விட்டு போக வேண்டும். அறியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு மனதார நீங்கள் செய்த தவறை உணர்ந்து கையில் இருக்கும் மிளகை கொண்டு போய் அப்படியே நெருப்பில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய இரும்பு தூப காலில் கற்பூரத்தை கொளுத்தி அதில் இந்த மிளகை போட்டால் கூட போதும். மிளகு பட பட என பொரியும் போது உங்களுடைய கர்மாவும் உடைந்து போகும். எத்தனை வாரங்கள் இப்படி செய்வது. தொடர்ந்து 11 வாரம் செய்வது நல்லது. இடையிடையே பரிகாரத்தை செய்ய முடியாமல் போனால் ஏதாவது தடை ஏற்பட்டால் அடுத்த வாரத்தை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா? தீய சக்தி இருக்கிறதா? என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டு, இருந்தால் பதறாமல் இதை மட்டும் செய்தாலே போதும்.

பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட்டால் வாழ்க்கையில் எல்லாம் நல்லதாக நடக்குமா என்று யோசிக்காதீங்க. பிறகு நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்கிறீர்கள். உங்களுடைய சுபாவம் உங்களுடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது, என்பதை வைத்து தான் அந்த சூரிய பகவான் உங்களுக்கான கர்ம வினைகளை நிர்ணயிப்பார். உண்மையாக செய்த பாவத்திற்கு வருந்தி இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -