உங்கள் வலது உள்ளங்கையில் இந்த ஒரு சின்னத்தை வரைந்து கொண்டாலே போதும். வாழ்க்கையில் எப்போதும் கஷ்டம், துன்பம், துயரம், தோல்வி இதில் எதுவுமே உங்களை நெருங்காது.

swasthik
- Advertisement -

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக வந்து போகத்தான் செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டகாலம் இருக்கக்கூடிய சமயத்தில், அந்த கஷ்ட காலத்தை சமாளிக்க, வரக்கூடிய பிரச்சனையிலிருந்து வெளிவர, சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க நாம் செய்யவேண்டிய சுலபமான ஒரு பரிகார வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sad

கஷ்டம் என்பது நமக்கு எப்போது எந்த சமயத்தில் வரும் என்பதை ஓரளவுக்கு நம்மால் தீர்மானித்து விட முடியும். எடுத்துக்காட்டுக்கு நாளையிலிருந்து இரண்டு நாள் சந்திராஷ்டமம் வருகின்றது. நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால் என்ன செய்வது.

- Advertisement -

நாளை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்றால் நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து விடுங்கள். பூஜை அறைக்குச் செல்லுங்கள் விநாயகரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் இடது கையை கொண்டு, வலது உள்ளங்கையில் சிறிய அளவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள். மை பேனாவினால் நான்கு முறை மேலே மேலே திரும்பத்திரும்ப வரைந்தால் அந்த ஸ்வஸ்திக் சின்னம் அவ்வளவு சீக்கிரத்தில் அழிந்து போகாது.

Swastik

இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து விட்டு உள்ளங்கைகளில் ஏதாவது ஒரு வாசனை நிறைந்த பூ அல்லது கொஞ்சமாக சந்தனத்தை குழைத்து தடவிக்கொண்டு விநாயகப் பெருமானிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ‘இன்றைய தினம் எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அப்படியே பிரச்சனை வந்தால் கூட அந்த பிரச்சினையை சமாளிக்கும் மன தைரியத்தை எனக்கு கொடுக்க வேண்டும்’. என்று வேண்டிக் கொண்டாலே போதும். உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனையிலிருந்து அன்றைய நாள் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதேபோல் தான் பரிகாரம் ஒன்றுதான். உங்களுக்கு எந்த கிரகத்தினால் பிரச்சினை வருகின்றதோ, அதாவது சில பேருக்கு செவ்வாய் கிரகத்தால் பிரச்சினை இருக்கும். சில பேருக்கு சந்திரனால் பிரச்சினை இருக்கும். சில பேருக்கு புதன் பகவானால் பிரச்சினை இருக்கும். சில பேருக்கு சனிபகவானால் பிரச்சனை இருக்கும். இப்படி எந்த கிரகத்தின் மூலம் உங்களுக்கு பிரச்சினை இருந்தாலும் அந்த கிரகத்துக்குரிய கிழமையில் இப்படி விநாயகரின் முன்பு நின்று ஸ்வஸ்திக் சின்னத்தை உங்களுடைய உள்ளங்கைகளில் வரைந்து கொண்டு, அந்த கிரகத்தின் மூலம் பிரச்சினை வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

swastik symbol benefits tamil

வாரம் ஒரு முறை எந்த கிழமையில் நீங்கள் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை உங்களுடைய கையில் வரைந்து கொள்கிறீர்களோ அன்றைய தினம் நீங்கள் சுத்தபத்தமாக அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சாதாரணமாக வலது கையில் இந்த சின்னத்தை வரைந்து கொண்டு நீங்கள் உங்களுடைய அலுவலகப் பணி, வீட்டுப்படி வீட்டு வேலை எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. கையில் இருக்கும் இந்த ஸ்வஸ்திக் சின்னம் அழிந்து விட்டால் மீண்டும் வரைந்து கொள்ளலாம்.

manjal-pillaiyar1

சனி பகவானால் பிரச்சினை என்றால் வாரம்தோறும் வரும் சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். புதன் பகவானால் பிரச்சனை என்றால் புதன்கிழமை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். குருபகவானால் பிரச்சனை இந்த பரிகாரத்தை வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு முறை இதை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -