தொடரும் துன்பங்கள் தொடராமல் இருக்க பரிகாரம்

sivan rice
- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். துன்பமில்லாத மனிதன் என்று யாரையுமே கூற முடியாது. ஏதாவது ஒரு வகையில் துன்பம் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெளிவந்து வெற்றிகளை பெறுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த துன்பம் ஒரு படிக்கட்டாக தெரியும். ஆனால் சிலரோ எந்த செயலை செய்தாலும் அதில் முன்னேற்றம் ஏற்படாமல் கஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது என்னும் பட்சத்தில் அவர்கள் வாழ முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சிவபெருமானை நினைத்து என்ன பரிகாரத்தை செய்தால் அவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்குரிய வழிகளை நாம் செய்கிறோமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் பலரும் கூறுவார்கள். இந்த ஒரு பிரச்சனை இருக்கிறது அந்த பிரச்சினையை சரி செய்வதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று யோசித்து அந்த பரிகாரத்தை செய்வார்களே தவிர்த்து பிரச்சினை வருவதற்கான முக்கிய காரணம் என்ன? நம்முடைய கர்ம வினைகளே. அந்த கர்ம வினைகளை எப்படி தீர்ப்பது என்பதை யாரும் யோசிக்க மாட்டார்கள். அந்த வகையில் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு காரணமாக திகழும் கர்ம வினைகளை தீர்ப்பதற்குரிய ஒரு எளிய பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் என்று வேண்டுமானாலும் தொடங்கலாம். இதற்காக நாம் பெரிதும் செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அன்றாடம் நம்முடைய இல்லங்களில் நாம் உணவு சமைக்கும் வழக்கம் நமக்கு இருக்கிறது. சாதம் வடிப்பதற்காக அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் இருந்து நாம் அரிசியை எடுப்போம். அப்பொழுது ஒரு கைப்பிடி அரிசியை “சங்கரா” என்று கூறியவாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.

இப்படி தொடர்ந்து 21 நாட்கள் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அந்த பாத்திரத்தில் தனியாக சேர்த்துக் கொண்டே வரவேண்டும். ஒவ்வொரு நாளும் கைப்பிடி அரிசியை எடுக்கும் பொழுது “சங்கரா” என்று மனதார கூறவேண்டும். சிவபெருமானை மனதார நினைத்துக் கூறி எடுத்து வைக்க வேண்டும். 22 வது நாள் அப்படி எடுத்து வைத்த அரிசியை சாதம் வடித்து புளிக்காத பசுந்தயிரை ஊற்றி தயிர் சாதம் செய்து அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

- Advertisement -

அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு இந்த தயிர்சாதத்தை நெய்வேத்தியம் செய்த பிறகு தயிர் சாதத்தை அந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். யார் ஒருவர் இந்த முறையில் ஒரு கைப்பிடி அரிசியை தினமும் தொடர்ந்து 21 நாட்கள் எடுத்து வைத்து தயிர் சாதம் செய்து தானம் செய்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் அதுவரை இருந்து வந்த துன்பங்கள் அனைத்தும் விலக ஆரம்பித்து விடும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியை வசியம் செய்யும் ஏலக்காய்

துன்பங்களுக்கு காரணமான கர்ம வினைகளை இந்த முறையில் நாம் நீக்குவதன் மூலம் நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் நீங்குவதோடு மேலும் துன்பங்கள் ஏதும் வராமல் நம்மால் பார்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -