தினமும் இந்த செடிக்கு உங்கள் கைகளால் மஞ்சள் குங்கும பொட்டு வைத்தால் போதும். பேரதிர்ஷ்டம் உங்கள் பின்னால் வரும்.

katrazhai
- Advertisement -

வெறும் அதிர்ஷ்டம் நம் பக்கத்தில் இருந்தாலே நாம் நிறைய விஷயங்களை சாதிக்கலாம். அதுவே பேரதிர்ஷ்டம் நம் பக்கத்தில் இருந்தால் இந்த உலகத்தையே சுலபமாக வென்று விடலாம். அதிர்ஷ்டம் உள்ளவர்கள், அதிகம் இல்லாதவர்கள் என்று எதை வைத்து கூறுகிறார்கள். காசு பணம் வசதி படைத்தவர்கள் அதிர்ஷ்டமானவர்கள். காசு பணம் வசதி இல்லாதவர்கள் அதிகம் கெட்டவர்கள். இப்படி தான் இந்த உலகம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் பணம் காசை தாண்டி மன நிம்மதி என்ற ஒன்று கட்டாயம் நாம் எல்லோருக்கும் தேவை. நிம்மதி இல்லாமல் வெறும் பணம் காசை வைத்துக்கொண்டு நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியாது.

katrazhai1

நமக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டி நீங்க வேண்டும். அதே சமயம் மன நிம்மதி கிடைக்க வேண்டும். அதேசமயம் வாழ்வதற்கு தேவையான அளவு பணம் காசும் இருக்க வேண்டும். இதற்கு ஆன்மீக ரீதியாக நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கற்றாழை செடி. இந்த செடிக்கு கண்திருஷ்டியை எதிர்மறை ஆற்றலை விளக்கக்கூடிய சக்தி உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த கற்றாழைச் செடியை முறையாக நம்முடைய வீட்டில் வளர்த்து பூஜை செய்து வந்தால் நமக்கு பணவரவும் அதிகரிக்கும். மன நிம்மதியும் அதிகரிக்கும். மருத்துவம் குணம் கொண்ட இந்த கற்றாழை செடிக்கு மகத்துவமும் மிகமிக அதிகமாக உள்ளது.

cash

உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் நீங்கள் கற்றாழைச் செடியை வளர்த்து வந்தாலும் சரி, அதற்கு உண்டான மரியாதையை கொடுக்க வேண்டும். பண வரவிற்காக வேண்டி, அதிர்ஷ்டத்திற்காக வேண்டி, ஒரு கற்றாழைச் செடியை தனியாக உங்களுடைய வீட்டில் வளர்த்து வர வேண்டும். அந்த கற்றாழைச் செடியை உங்கள் வீட்டிற்கு பின்பக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

கற்றாழை செடிக்கு குமரி என்ற மற்றொரு பெயரும் சொல்லப்பட்டுள்ளது. தினமும் வீட்டில் வைத்து வளர்த்து வரும் கற்றாழை செடிக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து, கற்றாழைச் செடியை மூன்று முறை சுற்றி வந்தால் உங்கள் குடும்பத்திற்கு இருக்கக்கூடிய தீராத எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது உடனடியாக தீரும்.

katrazhai2

பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்காமல் இருந்தாலும் சரி, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தாலும் சரி, இந்த கற்றாழைச் செடியை தினம் தோறும் வணங்கி வந்தாலே எல்லா பிரச்சனைகளுக்கு இந்த பிரபஞ்சம் நல்ல ஒரு தீர்வினை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

thulasi-vithai

வீட்டில் கற்றாழை செடியை வைத்தால் நிச்சயமாக அதை நாம் பராமரித்து வரவேண்டும். பராமரிக்காமல் அந்த செடியை அப்படியே மூலையில் போட்டு வைக்கக்கூடாது. துளசி செடிக்கு எத்தனை மகத்துவங்களை நீங்கள் கொடுத்து வீட்டில் வளர்த்து வருகிறீர்களோ, அதேபோல கற்றாழைச் செடியை வளர்த்து வந்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் சுபிட்சம் நிலைத்து இருப்பது உறுதி. முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -