சகலவிதமான கட்டுகளையும் உடைக்கும் விபூதி. இந்த விபூதியை நெற்றியில் இட்டு வந்தால், உடல் கட்டு, குலதெய்வ கட்டு அனைத்திலிருந்தும் விடுபடலாம்.

murugan-vel
- Advertisement -

கட்டை எப்படி உடைப்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, இந்த உடல்கட்டு, குலதெய்வ கட்டு என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மாந்திரீக ரீதியாக சில பேர் தங்களுடைய எதிரிகளுக்கு கெட்ட சக்திகளை ஏவிவிட்டு கெடுதல் செய்ய வேண்டும் என்பதற்காக, எதிராளியின் வீட்டில் இருக்கும் குலதெய்வத்தை கட்டி வைத்து இருப்பார்கள். குலதெய்வத்திற்கு மந்திர ரீதியாக கட்டை போட்டு விட்டால், கஷ்டம் வரும் நேரத்தில் குலதெய்வம், அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய முடியாது என்பதற்காக செய்யக்கூடிய சூழ்ச்சி இது. இதை முறியடிக்க என்ன செய்யலாம்.

vel

அடுத்தபடியாக சிலருக்கு உடல்கட்டு இருக்கும். மனிதர்களுடைய உடம்பிற்கு அருகில் நேர்மறை ஆற்றல் நெருங்க முடியாதபடி போடக்கூடிய கட்டை உடல்கட்டு என்று சொல்லுவார்கள். உடல் முழுவதும் எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கம் இருக்கும். உடல் கட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த நபர், யார் எந்த ஒரு நல்லது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் இஷ்டத்திற்கு யார் உடல்கட்டு போட்டார்களோ, அவர்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். இதனை வசியம் என்றும் சொல்லலாம்.

- Advertisement -

உங்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் இருந்தாலும், ஆன்மீக ரீதியான இந்த பரிகார முறையை செய்யலாம். இது தவிர கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதிர்மறை ஆற்றல்களின் கோளாறு இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

vibuthi

எவ்வளவு பெரிய கட்டுகளையும் உடைக்கக் கூடிய சக்தி முருகப்பெருமானின் வேலுக்கு உள்ளது. எவ்வளவு பெரிய துன்பத்திலிருந்தும் மனிதர்களை காக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் வேல். ஆறுமுகனுக்கு சொந்தமான வேல் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆறுமுகனை இந்த முறைப்படி வழிபட்டால், அனைத்து கட்டுகளும் உடைந்து நீங்கள் பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்து விடுவீர்கள். உங்களை காக்கக்கூடிய அந்த விபூதியை எப்படி முறைப்படி உருவேற்றுவது.

- Advertisement -

சுத்தமான விபூதியை வாங்கிவந்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த டப்பாவை மூடி போடாமல் திறந்தபடி பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள்.

pooja-room-vel

பூஜை அறையில் ஒரு விரிப்பில் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய கையில் விபூதி இருக்கட்டும். இடது உள்ளங் கைகளில் விபூதியை வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கையை விபூதிக்கு மேலே வைத்து மூடி இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம் இதோ!

- Advertisement -

Lord Murugan Vel

ஓம் ஐம் ரீம் வேல் காக்க

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு அந்த விபூதியை தினம்தோறும் உங்களுடைய நெற்றியிலும் உச்சந்தலையிலும் இட்டு வரவேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் உங்கள் குடும்பத்திற்கு எந்த கட்டு இருந்தாலும் சரி, எந்த பிரச்சனை எதிர்மறை ஆற்றலால் இருந்தாலும் சரி, அது உங்கள் குடும்பத்தை விட்டு விலகிவிடும்.

murugan-vel-thaipoosam

இந்த விபூதியை சுத்தமான தண்ணீரில் போட்டு கரைத்து வீடு முழுக்க மூலைமுடுக்குகளில் தெளித்து விடலாம். உங்கள் வீட்டு உறுப்பினர்களின் மேலே தெளித்து விடலாம். இப்படி செய்ய குலதெய்வ கட்டு விட்டு விலகிவிடும். அனைவரின் கஷ்டமும் சீக்கிரமே தீரவேண்டும் என்று, அந்த முருகப் பெருமானை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -