கேரளத்துப் பெண்களின் கரு கரு முடி வளர்ச்சிக்கு காரணம் இந்த ரகசிய பொருட்கள் தானா? தேங்காய் எண்ணெயில் அவர்கள் இந்த பொருட்களை போட்டு தான் தலைக்கு தேய்ப்பார்களா?

hair6
- Advertisement -

அழகான அடர்த்தியான கரு கரு  முடி என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது கேரளத்து பெண்களின் கூந்தல் தான். கேரளத்து பெண்கள் பெரும்பாலும் மூலிகை பொருட்களை, அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடிய தலைமுடி வளர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருட்களை எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வருவார்கள். அதில் பல வகையான எண்ணெய்கள் உண்டு. இன்று நாம் அதிலிருந்து ஒரு எண்ணெய் தயாரிக்கும் முறையைத்தான் பார்க்கப் போகின்றோம். நம்முடைய ஊர்களிலும் இந்த பொருட்கள் எல்லாம் சுலபமாக கிடைக்கும். பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி எண்ணெய் தயாரித்து தலையில் தடவி வாருங்கள். மூன்று மாதத்தில் முடி வளர்ச்சியை நிச்சயம் காண முடியும்.

1 லிட்டர் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக எடுத்துக் கொள்ளுங்கள். (1/2 லிட்டர் எண்ணெயில் தேவை என்றாலும் இந்த எண்ணெயை தயார் செய்யலாம். அதற்கேற்றது போல பின் சொல்லக்கூடிய பொருட்களை பாதியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.) அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் இந்த 1 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி விட்டு, அது முழுமையாக சூடாவதற்குள் பின் சொல்லக்கூடிய பொருட்களை ஒவ்வொன்றாக அதில் போட வேண்டும். கடுகு – 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன், லவங்கம் – 8, நெல்லிக்காய் – 5, பெரிய வெங்காயம் – 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக கலந்து விடுங்கள். நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி விட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்து அதே எண்ணெயில் மருதாணி இலை – 1/2 கைப்பிடி அளவு, செம்பருத்தி இலை – 1 கைப்பிடி, செம்பருத்தி பூ – 10 லிருந்து 15, துளசி இலை – 1 கைப்பிடி அளவு, பிரம்மி இலை – 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, அருகம்புல் – 15 லிருந்து 20 புல், சேர்த்து இந்த எண்ணெயை 15 நிமிடங்கள் நன்றாக சூடு செய்ய வேண்டும். நாம் இதில் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் காய்ந்து கருப்பு நிறமாக வரும் அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்தால் சூப்பரான மூலிகை எண்ணெய் தயாராக நமக்கு கிடைத்திருக்கும்.

இந்த எண்ணெயை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் தலையில் தேங்காய் எண்ணெய் போல முடிக்கு வைத்து வந்தால் மூன்றே மாதத்தில் நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு முடி வளர்ச்சியை காண முடியும். முடி உதிர்வு நிற்கும். தினம்தோறும் தலையில் எண்ணெய் வைத்துக் கொள்ள முடியாது என்பவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த எண்ணெயை இரவு தூங்கச் செல்லும்போது தலையில் வைத்துக் கொண்டு, மறுநாள் காலை தலைக்கு குளிக்கலாம். ஆனால் ரிசல்ட் தெரிவதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் நாட்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

மூன்று மாதம் வரை இந்த எண்ணெய் கெட்டுப் போகாது. வெளியில் வைத்து பயன்படுத்தலாம். இதில் குளிர்ச்சியான பொருட்களை நாம் சேர்த்து இருக்கின்றோம். இருந்தாலும் நன்றாக சூடு படுத்தி விட்டதால் தலைவலி சளி பிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் ஒரு சிலருக்கு அது செட்டாகாது. பயன்படுத்தி பாருங்கள். ஒரு சில நாட்களில் உங்களுக்கு பிரச்சனை இருந்தால் எண்ணெய் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை எனினும் பட்சத்தில் தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

இந்த பிரம்மி என்ற இலையை நம்முடைய ஊர்களில் வல்லாரைக் கீரை என்று சொல்லுவார்கள். சுலபமாக இது கீரை கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். முடி வளர்ச்சிக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியம். ஸ்கிப் பண்ணாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -