கேது பகவான் தாக்கம் குறைய ஜீவசமாதி வழிபாடு.

kethu jeevasamathi
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் அவருடைய கிரக அமைப்பை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் கிரகங்களில் சில கிரகங்கள் நன்மை தருவதாகவும், சில கிரகங்கள் தீமை தரக்கூடியதாகவும் இருக்கும். அதிலும் இந்த ராகு கேதுவில் கேது பகவான் தாக்கம் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசிக்காரர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த கேதுவின் தாக்கம் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நாட்டம் இல்லாது இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களிடத்தில் மனம் விட்டு பேச மாட்டார்கள். வெளியுலக தொடர்பு இருக்காது. எந்த ஒரு முன்னேற்ற சிந்தனையும் இல்லாமல் தனித்து விட்டு படி மனக்குழப்பத்துடன் இருப்பார்கள். ஒரு மனிதன் இப்படியான சூழ்நிலையில் இருப்பது அவனை மேலும் துன்பத்திற்கு உள்ளாகும் இந்த நிலை மாறி அவர்களும் மற்றவர்களுக்கு போல் சகஜமாக இருக்க இந்த ஒரு வழிபாடு வழி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கேது தாக்கம் குறைய ஜீவசமாதி வழிபாடு

இன்று ஜீவ சமாதிகளின் வழிபாடு பெருமளவு பெருகி இருக்கிறது. வாழும் காலம் முழுவதும் இறைவனையே நினைத்து இறுதி காலத்திலும் இறைவனே நினைத்து இறந்தவர்களின் ஜீவ சமாதி வழிபாடு நம்முடைய துன்பங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் கேது பகவானின் தாக்கம் குறைய நாம் எப்படி இவர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த வழிபாட்டிற்கு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஜீவசமாதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கேது பகவான் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அந்த நட்சத்திர நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் ஜீவசமாதிக்கு செல்ல வேண்டும். செல்லும் பொழுது உங்களுடைய வயது எத்தனையோ அத்தனை எண்ணிக்கையில் பெரிய கற்பூரத்தை வாங்கி செல்லுங்கள்.

- Advertisement -

ஜீவசமாதிக்கு சென்ற பிறகு உங்களுடைய இந்த பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிய பிறகு முதலில் ஒரு கற்பூரத்தை ஏற்றி ஒரு சுற்று சுற்றங்கள் அடுத்து ஒரு கற்பூரத்தை ஏற்றி அடுத்த சுற்று வேண்டும். உங்களின் வயது எத்தனையோ அத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும் ஒவ்வொரு சுற்றும் தொடக்கத்திலும் ஒரு கற்பூரத்தை ஏற்ற வேண்டும் நீங்கள் சுற்றி வரும் வரை கற்பூரம் எரிய வேண்டும் ஆகையால் தான் பெரிய கற்பூரத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

அது மட்டும் இன்றி இந்த வழிபாட்டை கேதுவின் நட்சத்திர நாளிலும் செய்யலாம். அதாவது மகம் மூலம் அஸ்வினி இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் இந்த வழிபாடு செய்த இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் அது மட்டும் இன்றி அமாவாசை பௌர்ணமி போன்ற முக்கியமான தினங்களிலும் இந்த ஜீவசமாதி சித்தர் வழிபாடு செய்வது அதிக பலனை தரும் இதில் உங்களுக்கு உகந்த நாளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்கி செல்வம் பெருக ஐயப்பன் வழிபாடு

இந்த ஜீவசமாதி வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து கேதுவின் போரம்பிடியிலிருந்து முழுவதுமாக விடுதலை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -