எதிர்மறை ஆற்றலால், கெட்ட சக்தியால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள். உங்களை விட்டும், உங்கள் வீட்டை விட்டும் கெட்ட சக்தியை ஓட ஓட விரட்டி அடிக்கும் விபூதி.

vibuthi
- Advertisement -

நிறைய பேர் உடலளவிலும் மனதளவிலும் ரொம்பவும் பலவீனமாக இருப்பார்கள். இந்த எதிர்மறை ஆற்றலினால் கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். எப்போதுமே பயந்த சுபாவத்தோடு இருப்பார்கள். எதைப் பார்த்தாலும் பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதேபோலத்தான் இருட்டைப் பார்த்தால் ஏதோ ஒரு உருவம் நிற்பது போல தோன்றும். நாய் குலைத்தால் பயம், 12 மணிக்கு வீதியில் நடந்தால் பயம். ஒரு வேலையை கூட உருப்படியாக செய்ய முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருவார்கள். இதில் சில குழந்தைகளும் இருப்பார்கள். சில பெரியவர்களும் இருப்பார்கள்.

இதே போல தான் வீட்டில் ஏதோ ஒரு கெட்ட சக்தி இருப்பது போலவே சில பேருக்கு தோன்றும். வீட்டில் நிம்மதி இருக்காது. வீட்டில் தெய்வ சக்தி இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கும். இப்படிப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நாமே எளிமையாக செய்து கொள்ளக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கெட்ட சக்தியை விரட்டி அடிக்கும் விபூதி செய்முறை:
நம் கையாலேயே இந்த ஒரு விபூதியை தயார் செய்து வைத்து விட்டால் போதும். தினமும் இந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றால் மன பயம் நீங்கி, தைரியம் பிறக்கும். எந்த ஒரு எதிர்மறை ஆற்றலை நினைத்தும் நாம் அனாவசியமாக பயப்பட மாட்டோம். சரி அந்த விகுதியை எப்படி தயார் செய்வது.

இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை முதலில் சுத்தமான பசுஞ்சாண விபூதி வாங்கிக்கோங்க. அடுத்து வசம்பு பொடி வாங்கிக்கோங்க. அடுத்தது காய்ந்த இரண்டு துளசி இலைகள், காய்ந்த இரண்டு வேப்ப இலைகள் தேவை. இது இரண்டையும் பொடி செய்து கொண்டாலும் சரி, அப்படியே காய்ந்த இலைகளாக இருந்தாலும் சரி. முதலில் விபூதியையும் வசம்பு பொடியையும் சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு காய்ந்த இந்த துளசி இலையையும் வேப்ப இலையையும் அந்த விபூதியில் போட்டு அப்படியே உங்கள் உள்ளங்கைகளில் வைத்து ‘ஓம்’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி விபூதியை உருஏற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். தினமும் நீங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது ‘ஓம்’ என்ற இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, இந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு வெளியே சென்றால் உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் இருக்கும். சுத்தமான தண்ணீரில் கொஞ்சம் இந்த விபூதியை போட்டு கரைத்து வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தெளித்து விடுங்கள்.

செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை சுவாமி கும்பிடும்போது வீட்டை எல்லாம் சுத்தம் செய்வீர்கள். அப்போது இந்த தண்ணீரை தெளிச்சுக்கோங்க. இந்த தண்ணீரில் தேவை என்றால் கொஞ்சம் மஞ்சள் பொடியையும் போட்டு கலந்து வீடு முழுவதும் தெளித்து விட்டால் வீட்டை பிடித்த பீடை விலகும். இதே தண்ணீரை உங்கள் தலைமையில் தெளித்துக் கொண்டால் உங்களை பிடித்த பீடையும் விலகும். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம். நம்பிக்கை கொடுக்கக் கூடிய பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறதா? அப்போ துர்கை அம்மனை வீட்டிலேயே இப்படி வழிபட்டு பாருங்கள். எந்த வகையான கண் திருஷ்டியாக இருந்தாலும் அது விலகி ஓடியே விடும்.

கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல் என்பது அடுத்தவர்களால் தான் நமக்கு ஏவி விடப்பட வேண்டும் என்பது கிடையாது. இந்த பூமியில் இறைசக்தி எந்த அளவுக்கு நிரம்பி இருக்கிறதோ அதே அளவுக்கு துர்சக்திகளும் நிரம்பி தான் இருக்கிறது. நாம் எந்த அளவுக்கு பாசிட்டிவ் ஆக நம்மை வைத்துக் கொள்கின்றோமோ, அந்த அளவுக்கு இறை சக்தி நம்மை ஆட்கொள்ளும். எந்த அளவுக்கு நம் மனதில் நெகடிவ் எனர்ஜி இருக்கிறதோ அந்த அளவுக்கு நம்மை துர்சக்திகள் ஆட்கொள்ளும் என்பதும் நிதர்சனமான உண்மை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -