நாளை முருகப் பெருமானை நினைத்து உங்கள் வீட்டில் இந்த 1 பொருளை மட்டும் வாங்கி வையுங்கள். சொந்த வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற கனவு சீக்கிரமே நிறைவேறும்.

murugan-vel
- Advertisement -

நிறையப் பேருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும், சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்துதான் வருகின்றது. ஆனால் அந்தக் கனவை, அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பல தடங்கல்கள் வரும். வீடு நிலம் வாங்க முடியாமல் நம்முடைய ஜாதகத்தில் ஏதேனும் தடை இருந்தால் அதை சரி செய்ய, முருகப்பெருமானின் வழிபாடு நமக்கு உறுதுணையாக இருக்கும். ‌ கையில் பணம் வைத்திருந்தால் மட்டும் போதாது. நல்ல வீடு அமையவும், நல்ல இடம் அமைய நமக்கு ஒரு யோகம் வர வேண்டும். அந்த யோகத்தை கொடுப்பவன் பூமிகாரகன் முருகப்பெருமானே. நீங்கள் கையில் பணம் வைத்திருந்து உங்களால் வீடு கட்ட முடியாமல் இடம் வாங்க முடியாமல் இருந்தாலும் இந்த பரிகார பூஜையை செய்யலாம்.

Lord Murugan Vel

என்னிடம் நிலம் வாங்க, வீடு வாங்க கையில் ஒரு பைசா கூட இல்லை. ஆனால் சொந்தமாக நிலம் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையும் ஆசையா நம்பிக்கையும் இருக்கின்றது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்‌ என்று சொல்பவர்களும், இந்த பூஜையை செய்து பலன் பெறலாம். நாளையதினம் முருகப் பெருமானை வேண்டி எந்த பொருளை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்து பூஜை செய்தால் வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உகந்த ஒரு பொருள், பராசக்தி தன்னுடைய கரங்களால், தன்னுடைய மகனான முருகப்பெருமானுக்கு பரிசாக கொடுத்த பொருள்தான் இந்த வேல்.

vel

‘வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே’

- Advertisement -

என்ற இந்த வரிகளுக்கு ஏற்ப நம்முடைய வீட்டில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு வேல் வழிபாடு. நாளைய தினம் கடைக்கு சென்று புதியதாக ஒரு வேலை வாங்கி உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அது எந்த உலோகத்தில் இருந்தாலும் சரி, உங்களுடைய வசதியை பொருத்தது. பித்தளை, வெள்ளி, பஞ்சலோகம், செம்பு ஏன் தங்கத்தில் கூட அந்த சிறிய வேளை நீங்கள் வாங்கி உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

Lord Murugan Vel

நாளை அந்த வேலை வாங்கும் போது உங்களது பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினை, அதாவது நிலம் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று முருகப் பெருமானை நினைத்து வேல் வாங்கிக் கொள்ள வேண்டும். புதியதாக வாங்கிய வேலை, பூஜை அறையில் வைத்து பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், தண்ணீரால் அபிஷேகம் செய்து வேலை சுத்தப்படுத்திவிட்டு, வேலுக்கு சந்தன குங்கும பொட்டு வைத்து இந்த வேலை பச்சரிசியில் நிற்க வைக்க வேண்டும்.

- Advertisement -

murugan-home

அதாவது ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசியை நிரப்பி அந்த பச்சரிசியில் இந்த வேலை சொருகி நிற்க்க வைத்து, வேலுக்கு முன்பாக ஒரு மண் அகல் தீபத்தில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அந்த வோலுக்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொண்டு, உதிரிப் புஷ்பங்களால் 108 முறை ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். உங்களால் முடிந்த நிவேதனத்தை முருகப்பெருமானுக்கு வைக்கலாம். அடுத்த வருட ஆடிக்கிருத்திகைக்குள் உங்கள் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு, வேலுக்கு தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இது ஆடிக்கிருத்திகை அன்று, நாளைய தினம் செய்ய வேண்டிய வேல் வழிபாடு.

நாளைய வழிபாட்டினை தொடர்ந்து உங்களுடைய வீட்டில் இந்த வேலை 48 நாட்கள் தொடர்ந்து வழிபட வேண்டும். 48 நாட்களும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினமும் காலையில் வேலுக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஏதாவது ஒரு பழத்தை பிரசாதமாக வைத்து, முருகப் பெருமானை நினைத்து உங்களுடைய வேண்டுதலை சொல்லி, கற்பூர ஆரத்தி காண்பித்தால் மட்டும் போதும். வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் வேலுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். 48 நாட்கள் வேல் வழிபாடு நிறைவடைந்தவுடன் இந்த வேலை கொண்டு போய் ஏதாவது முருகன் கோவில் உண்டியலில் முருகப்பெருமானுக்கு
காணிக்கையாக செலுத்திவிட வேண்டும்.

murugan

உங்களுடைய கோரிக்கைகளை பொறுத்து, 48 நாட்களில் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே கிடையாது. 48 நாட்களில் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற விட்டாலும் சீக்கிரமே அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த வேலை கொண்டு போய் முருகப்பெருமானின் உண்டியலில் செலுத்தி விடுங்கள். சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற உங்களுடைய கனவு சீக்கிரமே நினைவாக அந்த முருகப் பெருமானை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -