பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் புல்வாமா மாவட்டத்தில் ஏற்படுத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாமை முழுமையாக அழித்தது.
இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டமான போர் சூழல் ஏற்பட்டது. பிறகு பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதால் அதனை தடுக்க தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் போர் விமானத்தில் விரட்டி சென்று பிறகு, பாகிஸ்தான் நாடு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். பிறகு நேற்று இரவு அவர் சமாதான உடன்படிக்கையில் பாகிஸ்தான் வசமிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவரை வரவேற்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் கோலி ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அதில்: உண்மையான ஹீரோ. உங்களுக்காக நான் தலைவணங்குகிறேன். ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த ட்வீட் :
Real Hero. I bow down to you. Jai Hind ?????? pic.twitter.com/kDgocwpclA
— Virat Kohli (@imVkohli) March 1, 2019
அபிநந்தன் வருகைக்காக இந்திய அணிவீரர்கள் பலரும் ட்வீட் செய்துள்ளனர். இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்
English Overview : Virat kohli tweet about abhinandan returns