கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாற கொள்ளு பரிகாரம்

vinayagar kollu
- Advertisement -

யாராக இருந்தாலும் அவர் செய்யும் முயற்சி வெற்றி அடைய வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அப்படி விரும்பி செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையவில்லை என்றாலோ, என்ன செயல்களை செய்தாலும் அதில் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றாலோ, தீய சக்திகளின் பாதிப்பால் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றாலோ, அவர்களிடம் இருந்து வரக்கூடிய முதல் வார்த்தை என்னை பிடித்த நேரம் என்னை ஆட்டி படைக்கிறது என்பதுதான். அப்படிப்பட்ட கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றுவதற்கு விநாயகப் பெருமானை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான கொள்ளு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நமக்கு ஏற்படக்கூடிய கெட்ட நேரத்திற்கும், தடைகளுக்கும், தாமதங்களுக்கும் காரணமாக திகழக் கூடியவர் கேது பகவான். அப்படிப்பட்ட கேது பகவானுக்குரிய தெய்வமாக கருதப்படுபவர் தான் விநாயகப் பெருமான். மேலும் கேது பகவானுக்குரிய தானியமாக திகழக் கூடியதுதான் கொள்ளு. அதனால் கொள்ளை வைத்து விநாயகப் பெருமானுக்கு நாம் பரிகாரம் செய்யும் பொழுது கேதுவால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான கெட்ட நேரமும் நமக்கு நல்ல நேரமாக மாறிவிடும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய எமகண்ட நேரம் ஆன மதியம் 12 மணியிலிருந்து 1:30 மணிக்குள் தான் செய்ய வேண்டும். அன்றைய தினம் அசைவம் சாப்பிட்டு விட்டாலும் பரவாயில்லை. இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆனால் பெண்கள் தீட்டு நேரத்திலோ அல்லது வேறு ஏதாவது தீட்டு காரியங்களுக்கு சென்று விட்டு வந்தாலோ இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.

வீட்டில் இருக்கும் அனைவருமே இந்த பரிகாரத்தை செய்யலாம். இதில் வேறு எந்த தடைகளும் கிடையாது. கைக்குழந்தைகள் முதல் வயதான கிழவன் கிழவி வரை கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். கைக்குழந்தைகளுக்கு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும். ஒரு சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எமகண்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டோம் அல்லவா. உங்களுடைய வலது கையில் சிறிதளவு கொள்ளை எடுத்துக் கொள்ளுங்கள். விநாயகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டு அதை வைத்து உங்களுடைய தலையை வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றும் பொழுது நீங்கள் கிழக்கு பார்த்தவாறு தான் நிற்க வேண்டும்.

இவ்வாறு சுற்றி முடித்த உடனேயே இந்த கொள்ளை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு செய்வதாக இருந்தாலும் இதே முறைப்படி தான் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் எமகண்ட நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து வர நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட கெட்ட காலமாக இருந்தாலும் அவை அனைத்தும் மாறி நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க பிரத்யங்கிரா தேவி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை விநாயகப் பெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்து கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -