கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைக்கு கூட தீர்வை தரும் கொப்பரை. உங்களுக்கு வரும் பெரிய பெரிய நஷ்டங்கள் கூட தானாக லாபமாக மாறும்.

neruppu1
- Advertisement -

நஷ்டம் என்பது வெறும் பணம் காசுக்காக மட்டும் சொல்லப்படக்கூடிய வார்த்தை அல்ல. பணம் அல்லாமல் நம்முடைய ஆரோக்கியத்தில் நஷ்டம், மன நிறைவில் நஷ்டம், சந்தோஷத்தில் நஷ்டம், எதிர்பாராத உயிரிழப்பு கூட ஒரு நஷ்டத்தின் கணக்கில் தான் வரும். கண் திருஷ்டியில் வருவது கூட ஒரு நஷ்ட கணக்கு தான். இப்படி பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை பாதுகாக்க போகும் ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் ஒரு கொப்பரை தேங்காய் அவசியம் தேவை. ஹோமங்களில் எல்லாம் போட பயன்படுத்தும் கொப்பரை காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் பெரிய பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும். அதை ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். வெண்கடுகு 1 கைப்பிடி, 1 கட்டி கற்பூரம். மெழுகு கற்பூரம் வாங்கக்கூடாது. சூடம் என்று சொல்லப்படும் கட்டி கற்பூரத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பரிகாரத்திற்கு இந்த கொப்பரை தேங்காயை லேசாக வட்டமாக வெட்டிக்கொள்ள வேண்டும். தேங்காயின் மேல் பக்கத்தில் சிறிய அளவில் ஓட்டை போட்டுக் கொண்டால் போதும். அந்த ஓட்டையில் இந்த வெண்கடுகை போட போகின்றோம் அதற்காகத்தான். அந்த ஓட்டையில், தேங்காய்க்கு உள்ளே வெண்கடுகை போட்டுவிட்டு, அதன் உள்ளே கற்பூரத்தை வைத்து கொளுத்தி விட வேண்டும். இதை கையில் வைத்துக் கொண்டு நம்மால் சுற்ற முடியாது. ஆகவே ஒரு சாம்பிராணி தூபம் போடும் தூபக்கால் அல்லது எச்சில் பாடாத தட்டின் மீதும் இந்த கொப்பரை தேங்காய் வைத்து கற்பூரம் ஏற்றி நெருப்புமூட்டி விடுங்கள். உள்ளே இருக்கும் வெண்கடுகு எரிய தொடங்கும் அல்லவா. இந்த நெருப்பை வைத்து தான் நமக்கு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இந்த நெருப்பை சுற்றி திருஷ்டி கழிக்க போகின்றோம்.

நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் திடீரென்று எதிர்பாராத நஷ்டம் வந்துவிட்டது என்றால், இந்த நெருப்பை நீங்கள் தொழில் செய்யும் இடத்தை பூசணிக்காய் சுற்றுவது போல மூன்று முறை சுற்றி, தொழில் செய்யும் இடத்தில் வாசலுக்கு வெளியே வைத்து இதை அப்படியே கொழுந்து விட்டு எரிய விட்டு விட வேண்டும். அலுவலகம் கடை தொழிற்சாலை எதுவாக இருந்தாலும் அந்த இடத்தில் இந்த சின்ன பரிகாரத்தை செய்தால் கண் திருஷ்டி நீங்கி உங்களுக்கு வந்த நஷ்டம் அனைத்தும் லாபமாக மாறும்.

- Advertisement -

நீண்ட நாட்களாக ஒருவர் தினம் தினம் மருந்து சாப்பிட்டுக் கொண்டு தீராத நோயால் அவதிப்பட்டு வருகிறார் என்றால், அவருக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ரொம்ப நாளா படுக்கையிலேயே படித்திருக்கும் சூழ்நிலை. உடல்நிலை சரியில்லை என்பவர்களுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நோய்வாய் பட்டவர்களை எழுப்பி கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து அவர்களுக்கு திருஷ்டி கழிப்பது போல இந்த கொப்பரை தேங்காயை சுற்ற வேண்டும். திஷ்டி கழித்து விட்டு கொப்பரை தேங்காயை வீட்டு வாசலுக்கு வெளியில் கொண்டு போய் வைத்து எரிய விட்டு விட வேண்டும்.

சில சிறிய குழந்தைகள் வெளியில் சென்று வந்தால் எதையோ கண்டு பயந்து அலறி அழும். இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரத்தை எதற்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். கொப்பரை தேங்காயில் வெண்கடுகு போட்டு கற்பூரம் வைத்து கொளுத்தி இந்த நெருப்பை திருஷ்டி கழிக்க சுற்ற வேண்டும். பரிகாரம் அவ்வளவு தான்.

நீங்கள் இதை உங்கள் வீட்டில் எந்த நல்லதுக்கு வேண்டுமென்றாலும் பயன்பதித்துக் கொள்ளலாம். வந்த நஷ்டத்தினை லாபமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. வர போகும் நஷ்டத்தை தடுத்து நிறுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -