எவ்வளவு பெரிய பண பிரச்சனையில் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து வெளிவர, வெறும் 7 கிராம்பு இருந்தால் போதும்.

cash
- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்ட பண பிரச்சனையில் சிக்கி இருந்தாலும் சரி, நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டும் என்றாலும், அல்லது உங்களிடம் வாங்கிய கடனை யாராவது திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தாலும் சரி, அந்த பணத்தை வசூல் செய்ய அல்லது உங்களுடைய தேவைக்கு குறிப்பிட்ட நாட்களில் இவ்வளவு பணத்தை சேர்க்க வேண்டும் என்றாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். எவ்வளவு பெரிய பண சிக்கலில் இருந்தும் உங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சக்திப் இந்த பரிகாரத்திற்க்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

கிராம்பு, பணம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களில் இந்த கிராம்பு பயன்படுத்தப்படுகின்றது. இன்றும் இந்த கிராம்பை வைத்துதான் அதிசக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்திருக்க வேண்டும். (இந்த வாரம் பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் அடுத்த வாரம் இந்த பரிகாரத்தை செய்யலாம்.)

- Advertisement -

காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் மகாலட்சுமியின் தாயாரின் முன்பு மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து விடவேண்டும். உங்கள் உள்ளங்கையில் 7 கிராம்பு எடுத்துக்கொள்ள வேண்டும். கிராம்பு உடைந்து இருக்கக்கூடாது. மேலே மொட்டு அதை சுற்றி இருக்கும் இதழ்கள் கட்டாயம் இருக்க வேண்டும். சிறிய மஞ்சள் துணி ஒன்று நமக்கு தேவை.

தயாராக எடுத்து வைத்திருக்கும் கிராம்பை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றதோ அந்த பணப் பிரச்சனை சரியாக வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரிடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும். வேண்டுதல் முடித்து விட்டு கையில் இருக்கும் கிராம்பை மஞ்சள் துணியில் வைத்து, மஞ்சள் நூலால் கட்டி இந்த முடிச்சை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். மஞ்சள் நூல் இல்லை என்றால் மஞ்சள் துணியை மெல்லிசாக கிழித்து அந்த துணியிலே முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு நாளைய இரவு முழுவதும் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். அதன்பின்பு வியாழக்கிழமை இரவு, வெள்ளிக்கிழமை இரவு, இந்த 2 நாட்களும் இந்த முடிச்சை உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். சனிக்கிழமை காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு இந்த முடிச்சை அப்படியே கொண்டுபோய் அரச மரத்தின் கிளையில் கட்டிவிட்டு வந்துவிட வேண்டும். (சனிக்கிழமை அரச மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.) அரசமரத்திடமும் உங்களுடைய பணக் கஷ்டத்தை சொல்லி அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இப்படி செய்தால் பிரச்சனைக்கான தீர்வு கூடிய சீக்கிரத்தில் உங்களை வந்தடையும். ஒரே ஒருமுறை நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக எதிர்பாராத நல்லது ஏதாவது ஒரு விதத்தில் உங்களைத் தேடி வரும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பரிகாரத்தின் மூலம் நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -