இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும், அது உடனே நடக்கும்.

- Advertisement -

வழிபாடுகளிலேயே மிக மிக சிறந்த வழிபாடு என்றால் அது தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்து வழிபாடு செய்வது தான். அக்னி பகவானை முன்னிறுத்தி இறைவனை மனதார நினைத்து நாம் என்ன வேண்டிக்கொண்டாலும் அது நிச்சயமாக உடனடியாக பலிக்கும். இருளை நீக்கி நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை தரக் கூடிய சக்தி இந்த தீபஒளிக்கு உண்டு என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை தான் நாமும் பின்பற்றி வருகின்றோம். இதன் அடிப்படையில் இன்று நாம் ஒரு பரிகார தீபத்தை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். நினைத்ததை நினைத்தபடி நடத்தி தரக்கூடிய சக்தி வாய்ந்த அந்த தீபத்தை பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தால் பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

sunrise

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிக்க வேண்டும். சுத்தமாக குளித்து விட வேண்டும். பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய்யை ஊற்றி விட வேண்டும். அந்த நெய்யில் 2 பஞ்சுத் திரியை ஒன்றாக திரித்துப் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு கிராம்பு எடுத்து வலது உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கிராம்பு முழு கிராம்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையாக இருக்கும் கிராம்பை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் தான் முழுபலனையும் நம்மால் பெற முடியும். வலது கையில் கிராம்பை வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை மனதார இந்த பிரபஞ்சத்திடம் சொல்லவேண்டும். எந்த வேண்டுதலாக இருந்தாலும் அதை மனதில் நினைத்துக் கொள்ளலாம். உங்கள் கஷ்டத்திற்கு தகுந்தவாறு பிரார்த்தனை இருக்கட்டும்.

krambu

மனதார பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு வலது கையில் இருக்கும் இரண்டு கிராம்பை அந்த விளக்கில் இருக்கும் நெயில் போட்டு விட்டு தீபத்தை ஏற்றி வைத்து விட வேண்டும். நீங்கள் ஏற்றிய இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து தீபச்சுடரை பார்த்தவாறு மீண்டும் உங்களுடைய பிரார்த்தனையை தொடங்குங்கள். உங்களால் எவ்வளவு நேரம் மனதார தியான நிலையில் வேண்டுதல் வைக்க முடியுமோ, அந்த தீப சுடரை பார்த்து உண்மையான நம்பிக்கையோடு மனதை ஒருநிலைப்படுத்தி வேண்டுதல் வைக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடமாவது தீபத்தின் முன்பு பிரம்ம முகூர்த்த நேரத்தில் அமர்ந்து வேண்டுதல் செய்வது அவசியம். வேண்டுதலை முடித்துவிட்டு எப்போதும் போல உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்கலாம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டினை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து ஒரே கோரிக்கையை முழு மூச்சாக நினைத்துச் செய்யவேண்டும். தீபத்தின் முன்பு அமர்ந்து நீங்கள் இறைவனிடம் வைக்கக்கூடிய அந்த கோரிக்கை நிச்சயமாக 48 நாட்களுக்குள் நடப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தினமும் பழைய கிராம்பை எடுத்துவிட்டு புது கிராம்பை போடவேண்டும். பழைய கிராம்பை கால் படாத இடங்களில் போட்டுவிடலாம்.

vilakku-pray

பொதுவாகவே பிரம்ம முகூர்த்தத்துக்கு என்று ஒரு சக்தி உண்டு. அந்த நேரத்தில் நாம் என்ன நினைத்தாலும் அது உடனே பலிதமாகும். அடுத்தபடியாக நெய் தீபம், வீட்டில் இருக்கக்கூடிய இருளை நீக்கி விட்டு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய தீபம், அந்த தீபம். அடுத்தபடியாக கிராம்பு. மிக மிக மிக வசிய தன்மை கொண்ட ஒரு பொருள் என்றால், இந்த கிராம்புக்கு முதலிடம் உண்டு. ஆக ஒட்டுமொத்தமாக நேர்மறை ஆற்றல் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து உங்கள் மனதில் நினைத்த காரியத்தை நடத்திதரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது. நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றினால், நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -