இந்த வார்த்தையை மட்டும், இப்படி சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள். மகாலட்சுமி உங்கள் உடனே வந்து, நீங்கள் தொட்ட காரியத்தை எல்லாம் வெற்றி பெற செய்வாள்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

ஒரு மனிதனுக்கு மகாலட்சுமியின் அருள் மட்டும் பரிபூரணமாக கிடைத்து விட்டாலே போதும். அவன் வாழ்க்கையில் பரிபூரண நிம்மதியையும் பெறலாம். சிலபேருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இயற்கையாகவே கிடைத்திருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒருவனுக்கு படிப்பறிவு குறைவாக இருக்கும். திறமைகள் என்று சொல்லப் போனால் கூட பெரியதாக சொல்லுமளவிற்கு எதுவும் இருக்காது. ஆனால் அவனிடம் மகாலட்சுமி கட்டுக்கட்டாக பணமாக குடியிருப்பாள். ஒரு சிலர் அறிவாளியாக இருப்பார்கள். திறமைசாலியாக இருப்பார்கள். கடின உழைப்பையும் முதலீடாக போடுவார்கள். ஆனால் அவர்களிடம் மகாலட்சுமி தாய் நிரந்தரமாக தங்க மாட்டாள்.

mahalakshmi

இப்படி மனிதர்களுக்குள் வேறுபாடு வருவதற்கு என்ன காரணம். அவர்களுடைய தலையெழுத்தும், ஜாதக கட்டம், கர்மவினையும் தான். நிச்சயமாக இதை நம்மால் மறுக்கவே முடியாது. சரி, நமக்கு நேரம் சரி இல்லை. நம் தலையெழுத்து சரியாக இல்லை‌ இந்த மகாலட்சுமியை நம்முடனே அழைத்து செல்ல நாம் தொட்ட காரியம் வெற்றி பெற நாமும் அதிர்ஷ்டசாலிகள் ஆக மாற, என்ன தான் செய்வது. ஆன்மீக ரீதியாக உங்களுக்காக ஒரு சிறிய குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மகாலட்சுமியை வசியப்படுத்துவதற்கு ஆன்மீக ரீதியான பட்டியலில் நிறைய பொருட்கள் உண்டு. அதில் மிக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் என்றால் வெற்றிலை, இலவங்கம், பச்சை கற்பூரம், இப்படி வாசனை நிறைந்த பொருட்களை சொல்லலாம். ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு லவங்கம், ஒரு பச்சை கற்பூரத்தை, வைத்து சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி அந்த முடிச்சை பர்ஸ்ஸிலோ பாக்கெட்டிலிலோ வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம். (இதில் இருக்கும் வெற்றிலையை தினம்தோறும் மாற்ற வேண்டும். இலவங்கம் பச்சைக்கர்ப்பூரம் இந்த இரண்டு பொருட்களையும் வாரத்தில் ஒருநாள் மாற்றினால் கூட போதும்.)

Kubera muthirai

பூஜை அறைக்குச் செல்லுங்கள். தீபம் ஏற்ற நேரம் இருந்தால் ஏற்றலாம். இல்லை என்றால் உங்களுடைய கையில் குபேர முத்திரையை பிடித்துக் கொள்ளுங்கள். ‘மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு உங்கள் கையில் அந்த வெற்றிலை பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து தினசரி வேலைக்கு செல்லுங்கள். வேறு எதுவுமே தேவை கிடையாது. இதை மட்டும் தினந்தோறும் செய்து வந்தால் மகாலட்சுமி உங்களோடு வந்து விடுவாள்.

- Advertisement -

சாதாரணமாக ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கும், இந்த குபேர முத்திரையை வைத்துக்கொண்டு மந்திரத்தை உச்சரிப்பதற்கு நிறையவே வித்தியாசம் இருக்கும். சாதாரணமாக உச்சரிக்கக் கூடிய மந்திரம் உச்சரிக்கும் போது மட்டும் தான் அதனுடைய சக்தியை வெளிப்படுத்தும். உங்களுடைய விரல்களை இப்படி முத்திரையுடன் உரசிக்கொண்டு சொல்லக்கூடிய மந்திரங்கள், அந்த நாள் முழுவதும் உங்களை பின் தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இப்படி குபேர முத்திரையை வைத்து மகாலட்சுமியின் மந்திரத்தை மட்டும் தான் சொல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக கிடையாது. உங்களுடைய இஷ்ட தெய்வம், உங்களுடைய குல தெய்வம் எந்த தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்து அந்த தெய்வத்தை உங்கள் துணைக்கு அழைக்கிறீர்களோ அந்த தெய்வம் உங்களுடனே வரும். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக பலமுறை முயற்சி செய்தும் முடியாத காரியங்கள் எல்லாம் கூட ஒவ்வொன்றாக நல்லபடியாக நடக்க தொடங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -