ஆண்கள் இந்த தவறை செய்தால் உங்கள் கையில் இருக்கும் மகாலட்சுமி விலகி விடுவாள்! பிறகு தொட்டதெல்லாம் தோல்வி தான்.

sad-lakshmi
- Advertisement -

லட்சுமி கடாட்சம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பணம், காசு அதிகம் வைத்திருப்பது அல்ல! பணம், காசு இருந்தாலும் அதனை அனுபவிக்க ஒரு பிராப்தம் வேண்டும். இறை அனுகிரகம் இல்லை என்றால் கோடி கோடியாக பணம் இருந்தாலும் அதனை உங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடும். அந்த வகையில் ஆண்கள் செய்யும் இந்த ஒரு செயல் அவர்களிடமிருக்கும் மஹாலக்ஷ்மியை விலக்கி வைத்துவிடும். அது என்ன தவறு? ஏன் அந்த தவறை செய்யக்கூடாது? என்பதை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

hand

மகாலக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும் இடம் நம்முடைய உள்ளங்கை. உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதை அனைவரும் அறிந்தது தான். அதனால் தான் நம் முன்னோர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உள்ளங்கையை திறந்து வைத்து பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர். உள்ளங்கையை முதலில் பார்த்து எழும் அந்நாள் முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும், மேலும் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்முடைய நம்பிக்கை.

- Advertisement -

இத்தகைய உள்ளங்கை அதிர்ஷ்டம் ஆண்களுக்கும் அதிகம் உண்டு. ஆண்கள் காலையில் எழுந்ததும் தங்களுடைய உள்ளங்கையை பார்த்து விட்டு பின்னர் கண்ணை விழித்தால் அன்றைய நாளில் எந்த தடையும் இல்லாமல், நினைத்த படி வருமானம் பெருகும். அத்தகைய மகத்துவமான மகாலட்சுமி தங்கியிருக்கும் உள்ளங்கையால் நீங்கள் மனைவியை அடிக்கும் பொழுது உங்களிடமிருந்து மகாலட்சுமி விலகி விடுகிறாள் என்கிறது சாஸ்திரம்.

scolding-husband

மனைவி மட்டுமல்ல யாரையும் உள்ளங்கையால் அடிக்கக் கூடாது ஆனால் ஒரு ஆண் அதிகமாக யாரை அடிக்க முடியும்? மனைவியை தான். மனைவியை அடிக்கும் கணவன் இடத்தில் லட்சுமி கடாட்சம் இருப்பது இல்லை. எவ்வளவு கோபம் வந்தாலும், எவ்வளவு ஆத்திரம் வந்தாலும் அதனை அடக்கி இனிய வார்த்தைகளால் புரிய வைப்பதே நல்ல ஆண்மைக்கு அழகு. இதை விடுத்து மனைவியை கையால் ஓங்கி அறைவது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள் இடத்தில் நிச்சயம் மகாலட்சுமி கடாட்சம் இருப்பது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும், அதை அனுபவிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும்.

- Advertisement -

பெற்ற தாய், தந்தையர், கட்டிய மனைவி ஆகியோரை கண்ணியத்துடனும், மதிப்புடன் நடத்தும் ஆண் மகன் இடத்தில் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்ய விரும்புகிறாள். அவனுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும், இறுதியில் வெற்றி உண்டாகும் என்பது சூட்சம உண்மை. தடைகளைத் தாண்டி வெற்றியை பெற முதலில் வீட்டில் இருக்கும் பெரியவர்களையும், உங்களை நம்பி வந்த மனைவியையும் மரியாதையுடன் நடத்துங்கள்.

scold

ஆண்கள் மட்டுமல்ல இவ்வகையில் பார்த்தோமேயானால் பெண்களும் தங்கள் குழந்தைகளை உள்ளங்கையை வைத்து கன்னத்தில் அறைவது என்பது மிகப் பெரிய பாவச் செயலாகும். உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் உள்ளங்கையால் அடிப்பது தரித்திரத்தை உண்டு பண்ணும். உங்களிடமிருக்கும் மகாலட்சுமி விலகி, மூதேவி வந்து ஒட்டிக் கொண்டு விடுவாள். எனவே குழந்தைகளை அன்புடன் பேசி திருத்துவது நல்லது. சில தாய்மார்கள் எல்லாம் யார் மீதோ உள்ள கோபத்தை எல்லாம் தன் குழந்தை மீது காட்டுவார்கள்.

mahalakshmi

உங்களுக்கு இருக்கும் மன உளைச்சலை உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் காண்பித்தால் உங்களிடம் இருக்கும் செல்வ வளம் குறையும். வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷம் விலகிவிடும். பிறகு தொட்டதெல்லாம் தோல்வியைத் தான் தழுவும். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்பத்தைப் பொறுத்தவரை அகிம்சை வழியில் செல்வது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ண ஏதுவானதாக இருக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -