உங்கள் குலம் காக்க, உங்கள் குலதெய்வம், உங்கள் இல்லம் தேடி வந்து இனிமையான வரங்களை அள்ளி கொடுக்கும். இந்த 3 பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பூஜையறையில் வைத்தால்!

kula-dheivam
- Advertisement -

ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக தெய்வ சக்தி வாசம் செய்ய வேண்டும். குறிப்பாக குலதெய்வம் நம்முடைய வீட்டில் இருந்து நமக்கு வரங்களை அள்ளி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கு நாம் தினந்தோறும் குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டு பூஜை அறையில், தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக அந்த வீட்டுப் பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குலதெய்வத்தை மனதார நினைத்துக்கொள்வது, அந்த வீட்டிற்கு நன்மையை கொடுக்கும். பெண்களின் இந்த வேண்டுதல் அவர்களுடைய குலத்தை காக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

praying-god

உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி குலதெய்வத்தை வேண்டி நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து, இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்தால் நிச்சயமாக உங்கள் குலதெய்வம் உங்கள் இல்லம் தேடி வந்து இனிமையான வரங்களை அள்ளி கொடுக்கும். அப்படி ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள். சுத்தமான தேன் 4 ஸ்பூன், ஏலக்காய் 3, கிராம்பு 3, ஏலக்காய்களை ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் முதலில் தேனை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இடித்து வைத்திருக்கும் ஏலக்காய், லவங்கம் இந்த மூன்று பொருட்களையும் போட்டு அந்த பாட்டிலை மூடி விடுங்கள்.

honey 2

அவ்வளவு தான். நீங்கள் தயார் செய்த இந்தத் தேன் பாட்டிலை உங்கள் வீட்டு பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள் பூஜை அறையில் இந்த பாட்டிலை அப்படியே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இந்த பாட்டிலில் இருக்கும் தேனை தயார் செய்யும் நாள் அன்று உங்கள் வீட்டு வழக்கப்படி குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதேபோல உங்கள் வீட்டு பூஜை அறையில் கட்டாயமாக வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

சில பேர் சர்க்கரை பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு செய்வார்கள். சில பேர் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வார்கள். உங்கள் வீட்டு வழக்கம் எதுவோ அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். குலதெய்வத்தை மனதார வேண்டி தேனோடு ஏலக்காயும் லவங்கத்தையும் சேர்த்து வைக்கும் போது குலதெய்வம் நிச்சயமாக உங்கள் வீட்டில் வசமாகும். இந்த பாட்டிலில் இருக்கும் பொருட்களை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வைத்தாலும் போதும்.

krambu

உங்களுடைய வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்ற சூழ்நிலை இருந்தாலும், வீட்டுவாசலில் குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாமல் நின்று கொண்டிருந்தாலும், உங்கள் குலதெய்வமே தெரியவில்லை என்றாலும் தெரியாத குலதெய்வத்தை நினைத்து இதை செய்யும் பட்சத்தில், உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டு குல தெய்வம் உங்கள் வீட்டிற்கு ஓடோடி வந்து விடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -