இந்த ஒரு பொருள் மட்டும் போதும். தங்கள் குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்களும் கூட அவர்களது குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வழைக்க முடியும்

aragaja
- Advertisement -

இப்பொழுதெல்லாம் பலரும் தங்களது குலதெய்வம் எதுவென்று தெரியாமல் தங்களுக்கு இஷ்டமான தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சில பெண்கள் தங்கள் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுவதில் தவறொன்றுமில்லை. எனினும் முதலில் புகுந்த வீட்டு குலதெய்வத்தை பூஜித்து அதன் பின்னரே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கான பலன்கள் உங்களை முழுவதுமாக வந்தடையும். குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் தங்கள் குலதெய்வத்தை எவ்வாறு வீட்டிற்கு அழைப்பது என்பதை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vinayagar

பொதுவாகவே வாசனை மிகுந்த பொருட்கள் திரவியங்கள் அனைத்தும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தவைகளாகும். அந்த வகையில் சித்தர்கள் அருளிய அரகஜா, கோரோசனை, புனுகு, ஜவ்வாது போன்றவை இறையருளை தங்களிடம் ஈர்க்கும் சக்தி உடையவைகளாக உள்ளன.

- Advertisement -

குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்கும் முறை:
ஒரு பித்தளை அல்லது காப்பர் செம்பினை எடுத்துக் கொண்டு அதில் முக்கால் அளவு தண்ணீர் நிரப்பி அதனுள் வாசனை மிகுந்த அரகஜாவை சிறிதளவு சேர்த்து அதன் பின் செம்பின் மீது மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின்னர் அந்த செம்பினை பூஜை அறையின் முன் வைத்து உங்கள் இரண்டு கைகளையும் செம்பின் மீது வைத்து மனதார உங்கள் குல தெய்வத்தினை வணங்க வேண்டும்.

sembu-sombu

தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் கண்களைமூடி இறைவா உன்னை நான் அறிந்திருக்கவில்லை. என்றாலும் நான் உன்னை மனதார வேண்டுகிறேன். நீ எப்போதும் என்னுடன் இருந்து என்னையும் எனது குடும்பத்தையும் வழிநடத்த வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டால் நிச்சயம் உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வாசம் செய்ய வரும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாலே உங்களுக்கான நன்மைகள் அனைத்தும் நடந்தேறும். வாரம் ஒரு முறை இந்த குலதெய்வ பூஜையை தொடர்ந்து செய்துவர உங்களுக்கான நன்மைகள் அனைத்தும் உண்டாகும்.

- Advertisement -

சிவன் மற்றும் விஷ்ணு கோவில்களிலும் தெய்வங்களுக்கு விசேஷமாக பயன்படுத்தப்படும் இந்த அரகஜாவை அர்ச்சனை செய்யும் பொருட்களுடன் சேர்த்து, வியாழக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று காலபைரவருக்கு ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்துவர வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல விருத்தி உண்டாகும்.

Sivan-God

ஏழரை சனி, ஜென்மசனி, அஷ்டமத்து சனி, விரய சனி இவ்வாறு சனிபகவானின் பிடியிலிருந்து துன்பப்படுபவர்களும் குலதெய்வத்தை மனதார நினைத்து இந்த அரகஜாவை நெற்றியில் வைத்து வர அவர்களுக்கு உண்டாகும் பிரச்சினைகள் தீர்ந்து, நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்.

வாசனை மிகுந்த இந்த அரகஜாவை தினமும் நெற்றியில் இட்டு வர உங்களது எண்ணங்களும், யோசனைகளும் நேர்மறையானதாகவும் அதில் எப்போதும் வெற்றி கிடைக்குமாறும் இருக்கும்.

aragaja

அதேபோல் பூஜை பாத்திரங்களுக்கு பொட்டு வைக்கும் பொழுதும், சாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் பொழுதும் மஞ்சளுடன் சிறிதளவு அரகஜாவையும் சேர்த்து, குழைத்து பொட்டு வைத்து வந்தோம் என்றால் வீடு முழுவதும் வாசனையுடனும் தெய்வ கடாட்சம் நிறைந்ததாகவும் இருக்கும்.

- Advertisement -