வெள்ளையாக மாற இந்த தவறை எல்லாம் நீங்க செய்தீர்களா எனறு பாருங்கள். இப்படி செய்தால் இருக்கும் கலரை விட இன்னும் மோசமாக கருப்பாகி, தோல் சுருங்கி தான் போகும்.

face12
- Advertisement -

நிறைய பேருக்கு வெள்ளையாக மாற வேண்டும் என்ற மோகம் அதிகமாக இருக்கும். கடையில் விற்கக்கூடிய ஒயிட்னிங் கிரீம் என்று பார்த்ததை எல்லாம் வாங்கி முகத்தில் போட்டு, அடித்து பிடித்து எப்படியாவது வெள்ளையாக மாறி இருப்பார்கள். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்கள் பயன்படுத்தி வந்த க்ரீமை, பயன்படுத்தாமல் நிறுத்தும் போது தான் பக்கவிளைவுகள் தெரிய ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட ஒயிட்னிங் கிரீம் வகைகளை தொடர்ந்து போட்டு வந்து, பிறகு உடனடியாக நிறுத்தும் போது நம்முடைய முகம் இன்னும் கருப்பாக ஆரம்பிக்கும். நம்முடைய முகத்தில் இருக்கும் தோல் சுருங்கி, நாம் இயற்கையாக இருந்த கலரை கூட இழக்கும் நிலைமைக்கு வந்து விடுவோம்.

என்னதான் மார்க்கெட்டில் பெஸ்ட் ஒயிட்னிங் கிரீம், பெஸ்ட் பிராண்டட் கிரீம் என்று சொன்னாலும் வெள்ளையாக வேண்டும் என்று உடனடியாக அதை வாங்கி முகத்தில் அப்ளை செய்யக்கூடிய பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். இந்த க்ரீமை போட்டா இரண்டே நாட்களில் கலரா மாறிடுவீங்க. அப்படின்னு சொன்னா அந்த கிரீமை போடவே போடாதீங்க. அது பெரிய ஆபத்து. சரி, அந்த கிரீமை எல்லாம் வாங்கியாச்சு. போட்டும் பார்த்தாகி விட்டது. அந்த க்ரீமை நிறுத்தியவுடன் முகத்தில் பிரச்சினையும் தெரிகின்றது. இதற்கு என்னதான் தீர்வு.

- Advertisement -

உடனடியாக இந்த கிரீம் போடுவதை நிறுத்த கூடாது. தினம்தோறும் இந்த கிரீமை நீங்கள் பயன்படுத்தி வந்தால் முதலில் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த கிரீமை போட தொடங்குங்கள். அதன் பின்பு இரண்டு நாட்களாக குறைக்க வேண்டும். அதன் பின்புதான் முழுமையாக இந்த கிரீம் போடுவதை நிறுத்த வேண்டும். இப்படி படிப்படியாகத்தான் அந்த கிரீமை தவிர்க்கமுடியும். அதன் பின்பு உங்களுடைய சருமத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர இயற்கையாக கிடைக்கும் குங்குமாதி தைலம் பயன்படுத்தலாம்.

இதையும் நன்றாக ஆர்கானிக் ஆக இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த எண்ணெய் இருக்கும். இந்த எண்ணெயை இரண்டிலிருந்து மூன்று சொட்டு போட்டு உங்களுடைய முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து விட்டு இரண்டு மணிநேரம் கழித்து குளிக்கலாம். இந்த எண்ணெயை போட்டு விட்டு வெயிலில் செல்லக்கூடாது. கூடுமான வரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருங்கள்.

- Advertisement -

உங்களுடைய முகத்தில் நிறைய கரும்புள்ளிகள் முகப்பருக்கள் இருக்கிறது, எண்ணெய் வடியும் பிரச்சனை இருக்கிறது என்றால், இந்த எண்ணெயை 30 நிமிடங்கள் மட்டும் உங்களுடைய முகத்தில் வைத்துவிட்டு அதன் பின்பு கடலை மாவு அல்லது சோப்பு போட்டு முகத்தை கழுவிக் கொள்ளலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த எண்ணெயை பயன்படுத்தி வாருங்கள். வாடிய உங்களுடைய முகம் கூட சீக்கிரமே பொலிவாக மாறும்.

வெள்ளையாக மாற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் செயற்கையாகக் கிடைக்கக்கூடிய க்ரீம்களை தவிர்த்துவிட்டு, கடலைமாவு, பாசிப்பயிறு, பச்சைப் பயிறு, தக்காளி, அரிசி மாவு, கோதுமை மாவு, பப்பாளி பழம், இப்படி இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து உங்களுடைய முகத்தை அழுகுப்படுத்த முயற்சி செய்து பார்க்கலாம். இயற்கையான முறையில் நம்மை அழகுப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நாட்கள் எடுக்கும் தான். ஆனால், பொறுமையாக இருந்தால் அந்த அழகு மூலம் எந்த ஆபத்தும் நம்முடைய சருமத்திற்கு ஏற்படாது. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -