சாம்பிராணி புகையை இந்த முறையில் போட்டுப் பாருங்கள். நிச்சயம் மகாலட்சுமி தேவி உங்கள் வீடு தேடி வந்து தான் ஆக வேண்டும்

lakshmi
- Advertisement -

ஒரு பெண்ணை பார்த்தவுடன் மகாலட்சுமி போல் இருக்கிறாள் என்பார்கள். ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கிறது என்பார்கள். இவ்வாறு அவர்கள் வாயிலிருந்து வருகின்ற லட்சுமி கடாட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் பல இருக்கின்றன. அதிர்ஷ்ட தேவதையாக பார்க்கப்படுபவர் மகாலட்சுமி தேவி. மகாலக்ஷ்மி தேவி செல்வத்திற்கு அதிபதியாவாள். எந்த வீட்டில் லக்ஷ்மி தேவி குடி கொண்டு இருக்கிறார்களோ அந்த வீட்டில் பணம் என்பது குறைவில்லாமல் இருக்கும். கஷ்டம் என்பதே அந்த வீட்டில் எட்டிப் பார்க்க வாய்ப்புகள் இருக்காது. அவ்வாறு உங்கள் வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க, கஷ்டங்கள் விலக இந்த சாம்பிராணி புகை மட்டும் போதும். வாருங்கள் இந்த சாம்பிராணி புகையை உங்கள் இல்லங்களில் எவ்வாறு போட வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அப்படி ஒரு நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். அதற்கு காரணம் அவர்கள் தினமும் பூஜை செய்வதற்கு முன்னர் சாம்பிராணி புகை போடுவது தான். இவ்வாறு வீட்டை எப்போதும் தூய்மையாகவும், வாசனை மிக்கதாகவும் வைத்திருந்தாலே மகாலட்சுமி தேவி நாம் அழைக்காமலேயே நமது வீடு தேடி வந்து விடுவார் என்பது அவர்களது தீராத நம்பிக்கையாகும்.

- Advertisement -

சுத்தம் இருக்கின்ற இடத்தில் தான் ஸ்ரீதேவி குடியிருப்பாள். சுத்தம் இல்லாத இடத்தில் மூதேவி மட்டுமே நிறைந்திருப்பாள். இவ்வாறு ஸ்ரீதேவி குடிகொண்டிருக்கும் இடம் எப்போதும் செல்வச் செழிப்புடன் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். மூதேவி இருக்குமிடம் பணம் என்பதே பற்றாக்குறையாக இருக்கும் இடமாக இருக்கும். தூய்மை இல்லாத இடம் இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் மூதேவி குடி கொள்வாள்.

இவ்வாறு உங்கள் வீட்டில் ஸ்ரீதேவி குடிகொண்டிருக்கவும், மூதேவி உள்நுழையாமல் இருக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரம் இருக்கிறது. அதனை தவறாமல் செய்து வர எப்பொழுதும் உங்கள் வீடு தெய்வ கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். நமது வீடு தெய்வ சக்திகள் நிறைந்ததாக இருந்தால் நமக்கு நடக்கும் அனைத்தும் நன்மையாகவே நடக்கும். எதிரிகள் நம் வீடு தேடி வந்தாலும் அவர்களின் எண்ணங்கள் பலிக்காமல் போகும்.

- Advertisement -

இதற்கு அனைவரது வீட்டிலும் சாம்பிராணி புகை போடும் பொழுது, அதனுடன் இந்த இரண்டு பொருட்களை மட்டும் உடன் சேர்த்து கொள்ளுங்கள். அதாவது நாட்டு மருந்துக் கடைகளுக்குச் சென்று வெள்ளை குங்கிலியம் மற்றும் மருதாணி விதையை வாங்கி வர வேண்டும். பின்னர் அவற்றை பொடி செய்து கொண்டு நீங்கள் வைத்திருக்கும் சாம்பிராணி பொடியுடன் இவற்றையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது பூஜை செய்யும் நாட்களில் இந்த சாம்பிராணி பொடியை நெருப்புடன் சேர்த்து அதன் புகையை வீடு முழுவதும் காட்டி வாருங்கள். இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் வீட்டில் இருக்கும் துர்சக்திகள் அனைத்தும் வெளியேறி தெய்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும்.

- Advertisement -